காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் தேமுதிக தலைவர்விஜயகாந்தின்கால் விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவால் தீவிரஅரசியலில் இருந்துவிலகி இருக்கிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த், மருத்துவபரிசோதனைக்காகச்சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரதுகாலிலிருந்து3 விரல்கள்அகற்றப்பட்டதாககூறப்படுகிறது.
அவரது காலில் ரத்த ஓட்டம் சீராகஇல்லாததன்காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைமைக் கழகமும், கால் விரல்கள் அகற்றப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.