Vijayakanth hoisted the national flag... Volunteers were shocked to see his health!

75வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று (15/08/2022) காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Advertisment

அதேபோல், விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றதால், அவரது தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேசமயம், விஜயகாந்தின் உடல்நிலையைப் பார்த்து அவரது கட்சியின் தொண்டர்கள் பலர் கண்கலங்கி நின்றனர்.

Advertisment

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது. அமைச்சர் கார் மீது காலணி வீசியது யாராக இருந்தாலும், அதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்" என்றார்.