Skip to main content

’பழகலாம் வாங்க...’- ரஜினி  படம்  பாணியில் விஜயகாந்த் மகன்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 

d


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், வேடசெந்செந்தூர்,  கொடைக்கானல் மற்றும் கீழ் மலை, மேல்மலை பகுதிகளில் கஜா புயல் 
கோரத்தாண்டவம்  ஆடியதின் மூலம்  மக்களும் விவசாயிகளூம் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  அப்படி இருந்தும் கூட ஆளும் கட்சி யை விட திமுக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.கள் தான்
 பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறி வருகிறார்கள். 
 

இந்த நிலையில் தான்  கடந்த 26 ம்தேதி தேமுதிகவின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், சுதீஸ் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வந்த பிரேமலதாவுக்கு மாவட்ட எல்லையான அய்யலூரில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் 500ற்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பெருந்திரளாக நின்று வரவேற்பு கொடுத்தனர்.

 

d

 

விஜயகாந்த் வந்தால் எந்த அளவுக்கு கட்சி கார்கள் வரவேற்பு  கொடுப்பார்களோல
 அதுபோல் பிரேமலதாவுக்கும் கொடுத்தனர்.  அப்போது கூட்டத்தில் உள்ள தேமுதிகவினர்,  அண்ணியார்  வாழ்க இளைய கேப்டன் வாழ்க என கோஷம் போட்டனர்.  அதை தொடர்ந்து வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல்  சென்ற பிரேமலதா கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட கல்லறை மேடு,பதுக்காடு, பேத்துப்பாறை, நாயுடுபும் உள்ளிட்ட சில இடங்களில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.   அதன் பின் கொடைக்கானலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.   அப்போது உடனிருந்த விஜய பிரபாகரனிடம் கட்சிக்காரர்கள் பலர் சென்று பேசியும் போட்டோ மற்றும் செல்ஃபி எடுப்பதுமாக  இருந்தனர். அப்பொழுது கட்சிக்காரர்கள் சிலர் இளைய கேப்டனை பேச சொல்லுங்கள் அண்ணியாரே என்று கூறியும் கூட விஜய பிரபாகரன் பேசவில்லை.

 

அதன்பின் பிரேமலதா வேடசந்தூர் பகுதியில் உள்ள கோப்பைப் போட்டியில் நிவாரண உதவிகள் வழங்கி விட்டு நத்தத்தில் ஒரு பொதுக்கூட்டம் போல் மேடை அமைக்கப்பட்டு  புயலால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பக்கெட்டுடன் நிவாரண பொருட்களை வழங்கினார். 

 

d


ஆனால் ஆரம்பித்திலிருந்து விஜய பிரபாகரனை கட்சிக்காரர்கள் பேச சொல்லி வலியுறுத்தியதின் பேரில் நத்தத்தில் பைக்கை பிடித்த விஜயபிரபாகரனோ.... தேமுதிக அழிந்து விட்டது என்று கூறி வருகிறார்கள். ஆனால் எழுச்சி நடை போட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் அதிகமாக தொண்டர்களையும் இளைஞர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டும். என்னை தலைவர் கேப்டனின் மகன் என்று நினைக்காதீர்கள். நண்பர்கள் போலவும் தோழர்கள் போலவும் ஏன் கல்லூரியில் படிக்கும்போது மாமன் மச்சான் என்று கூப்பிட்டு கொள்வோமே அது மாறி கூட பேசி பழகிகொள்ளுங்கள் என சிவாஜி  படத்தில் ரஜினி பேசுவது போல் பேசி விட்டு,   கூடிய விரைவில் உங்கள் கேப்டன் பழைய கேப்டனாக வருவார் அவரை முதல்வராக ஆக்குவதுதான் நம் கடமை என்று கூறினார்.   அதை கேட்டு கூட்டத்தில் இருந்த மக்கள் பலத்த  கை தட்டலை எழும்பினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.