Skip to main content

மக்களை சந்திக்க  முதல்வருக்கு திராணி இல்லை!  பிரேமலதா விஜயகாந்த் 

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
v3


 கஜா புயலால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மக்களுக்கு நிவாரண உதவிகள்  வழங்கிவிட்டு வேடசந்தூர் தொகுதியில் உள்ள தோப்புப்பட்டி  கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தேமுதிக மாநில பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த்  வழங்கினார். அப்பொழுது  கூட்ட நெரிசலில் நிவாரணப் பொருட்கள் வாங்குவதில் தோப்புப்பட்டியைச் சேர்ந்த மகமாயி  என்ற பெண் மயங்கி விழுந்தார்.  உடனே அருகிலிருந்த கட்சிக்காரர்கள் அந்தப் பெண்ணுக்கு  மயக்கம் தெளிய வச்சு நிவாரணப் பொருள் கொடுத்து அனுப்பினார்கள்.

 

d

 

அதைத்தொடர்ந்து  பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,   ‘’எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் தேமுதிக சந்திக்க தயாராக இருக்கிறது. தமிழகத்தில் புதுப்புது கட்சிகள்  வரட்டும்.  எங்களுக்கு உள்ள  வாக்குவங்கி பலமாக உள்ளது. ஆனால் வரப்போகிற தேர்தல் தமிழகம் பார்க்காத தேர்தலாக புது தேர்தலாக இருக்கும். ஏனென்றால் இரண்டு ஆளுமைமிக்க தலைவர்கள் இங்கு கிடையாது.  வெற்றிடம் இருக்கு என்று சொல்கிறார்கள்.  தலைவர்களுக்கு தான் வெற்றிடம் உள்ளது.  கட்சிக்கு கிடையாது.  நிச்சயமாக எத்தனை புதுவரவுகள் வந்தாலும் அந்தந்த கட்சிகளுக்கு  வாக்கு வங்கிகள் உள்ளது. மக்கள் இந்த முறை மாற்றத்திற்கான ஒரு மாற்றத்தை கொண்டு வருவது உறுதி.  இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திமுகவும் அதிமுகவும் இருக்கட்டும் இரண்டு கட்சிகள் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.

 

 கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் பார்க்கமுடியாமல் ஊருக்குள் போகமுடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. 


மக்களுக்கு செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் ஆளுங்கட்சி தவறியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி  மக்களை சந்திக்க திராணி இல்லாததால் ஹெலிகாப்டரில் சுற்றிவிட்டு சந்திக்க  முடியவில்லை என்று போய் விட்டார்.  அந்த மாதிரி நிலைமை இருக்கிறது.   வரப்போகிற தேர்தல் மாற்றத்தை நிச்சயம் தரும். கடந்த 10 நாட்களாக மின்சாரம் இல்லாமல் சாலை வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

 

மக்களுடைய பிரச்சினையை கையிலெடுத்து தீர்க்கக்கூடிய அரசு தான் இனிமேல் வரவேண்டும்.  தேமுதிக வாக்குவங்கி கூடிக்கொண்டே வருகிறது. வரப்போகும் தேர்தலில் விசுவரூபம் எடுத்து வெற்றி பெறுவோம். மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய காங்கிரஸ் பாஜக கட்சி கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி ராகுல் காந்தியை தவிர வேற வேட்பாளரை அறிவிக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறார். காங்கிரஸ் இன்னும் தரம்தாழ்ந்து மோடியின் அப்பா யாரென்று தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதுதான் மக்கள் பிரச்சனையா. மக்களுக்கு செய்ய வேண்டிய பிரச்சனை இன்னும் எவ்வளவோ இருக்கிறது. வல்லரசாக்க திட்டங்களை கொண்டு வருவதற்கு.

 

ஐந்து வருடம் பாரதிய ஜனதா கட்சி பிரதமராக மோடி இருந்துவிட்டார். வேற ஒரு பிரதமர் வேட்பாளரை பாஜகவால் அறிவிக்க முடியுமா?  முடியாது சும்மா சப்பைக்கட்டு கட்டி அடுத்த கட்சி மீது பழியை போட்டு இவர்கள் உத்தமர்கள் என்று காண்பிபதற்காக இருங்காங்க பாஜக. மோடியோட அப்பா யார் என்று கேட்கிறார்கள் இதெல்லாம் தரம் தாழ்ந்த அரசியல் இதெல்லாம் மாற வேண்டும். நாடும் மக்களும் முன்னேறும் வகையில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.   மக்கள் பிரச்சினையை பேசாமல் காங்கிரஸ் பாரதிய ஜனதா மீது குற்றம் சொல்ல பாரதிய ஜனதா காங்கிரஸ் மீது குற்றம் சொல்லுகிற அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக நல்லது நடக்க கூடிய அரசாங்கம் இங்கு இல்லை. மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி. ஆயிரம் கோடி அறிவித்தும் முதல்வர் 10 நாட்கள் ஆகியும் இன்னும் கொடுக்கவில்லை. மத்திய அரசிடம் நிதி வரும் அதை வாங்கி கொடுத்துவிட்டு ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறாரா.

 

 மக்கள் கேள்வி நான் கேட்கிறேன். முதல்வர் ஆயிரம்கோடி அறிவிப்பை அறிவித்துவிட்டு எதற்காக எடப்பாடி பழனிச்சாமி இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசிடமிருந்து நிதியை வாங்கி இவர் கொடுத்த போல் கொடுத்துவிட்டு மீதி தொகையை இவர்கள் சுருட்டி விடலாம் என நினைக்கிறார்களா.     இது மக்கள் கேள்வி ஆகையால் இனிமேல் அறிவிப்பு அரசியல் இங்கு எடுபடாது மக்களுக்கான பணிகள் என்ன  என்று ஆராய்ந்து செய்யக்கூடிய நல்ல அரசு, தைரியமான நல்ல முதல்வர் நல்லாட்சி வேண்டும் என்பது மக்கள் கருத்தாக இருக்கிறது என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.