Skip to main content

’விஜயகாந்த் சிங்க கர்ஜனையுடன் மீண்டும் வருவார்’- பிரேமலதா விஜயகாந்த்

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
v

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் கீழ் மலை, மேல்மலை பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம்  ஆடியதின் மூலம் மலை கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  அப்படி இருந்தும் கூட ஆளும் கட்சியை விட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறி வருகிறார்கள்.

 

 இந்த நிலையில் தான் கொடைக்கானல் மலை கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறுவதற்கு தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழக துணை செயளாலர் சுதிஸ் மற்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் வத்தலகுண்டு வழியாக வந்த போது வத்தலகுண்டு ஒன்றிய செயளாலர் கருத்த பாண்டி தலைமையில் கட்சி பொறுப்பாளர்கள்  அய்யம்பாளையம் பிரிவில் சிறப்பான வரவேற்பு கோடுத்தனர்.

 

v

 

 அப்பொழுது பட்டிவீரன்பட்டி பேருர் கழக செயளாலர் நாகேந்திரன் சுவிதா தம்பதியரின் மகனுக்கு பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்திதால் அதை தொடர்ந்து அந்த குழந்தைக்கு  தவசிகாந்த் என்று பெயர் சூட்டினார். 


     அதன் பின்னர் கொடைக்கானல்  சென்ற பிரேமலதா கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட கல்லறை மேடு புதுக்காடு பேத்துப்பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.  அதன் பின் குஞ்சுகள் விளையாட்டு மைதானத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

 

  அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,   கஜா புயலால் பாதித்த அடுத்த நாளே பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேமுதிக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.  இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்,  வேடசந்தூர்,  நத்தம் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்கியுள்ளோம்.  அதனைத் தொடர்ந்து 28.29 தேதிகளில் புதுக்கோட்டையிலும் தஞ்சை வேதாரண்யம், திருவாரூர் பகுதிகளுக்கும் சென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்க இருக்கிறேன்.

 

v

 

 கொடைக்கானல் பகுதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மரங்கள் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.  இதற்கு காரணம் தைல மரங்கள் தான்.  இவை அடிக்கடி விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஆபத்தினை  விளைவிக்கக்கூடிய அனைத்து மரங்களையும் அகற்றவேண்டும் . கொடைக்கானலில் பல ஆண்டுகளாக எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் நடைபெற உள்ள புயல் பாதிப்புக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வெறும் வாயால் மட்டுமே முதலமைச்சர் கூறியுள்ளார்.  அத்துடன் மத்திய அரசிடம் 15,000 கோடி கேட்டுள்ளார்.  அது எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.  முதலமைச்சரும் கட்சி நிர்வாகிகளும் மக்களை சந்திக்க பயப்படுகின்றன.  ஆனால் மக்கள் கொந்தளிப்பு கொந்தளிப்பில் உள்ளனர். 10 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் மறியல் செய்கின்றனர்.  பயந்து ஓடுவார்கள் ஆட்சிக்கு தேவையில்லை.  அப்படி ஓடிக்கொண்டிருந்தால் மக்கள் உங்களை ஓட வைக்கும் நாள் விரைவில் வரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேளுங்கள் 20 தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் தெளிவாக உள்ளனர்.  மாற்றத்துக்காக அவர்கள் தயாராகி வருகின்றனர்.  விஜயகாந்த் சிங்க கர்ஜனையுடன் மீண்டும் வருவார்’’ என்று கூறினார்
.

அதைத் தொடர்ந்து வேடசந்தூர் அருகே உள்ள தொட்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.
 பிரேமலதா விஜயகாந்த் உடன் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி துணைச் செயலாளர் செந்தில்குமார் நகர செயலாளர் மோகன் பொருளாளர் கருணாநிதி ஒன்றிய செயலாளர் கணேசன் துணைச் செயலாளர் மகேந்திரன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.