Advertisment
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தேமுதிக கட்சி துவக்க நாளான இன்று (14.09.2020) தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதில் தே.மு.தி.க நிர்வாகிகள், தே.மு.தி.க அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்டம், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.