Skip to main content

திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Published on 01/04/2018 | Edited on 01/04/2018

 

vijayagath


 

காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வருகின்ற 06.04.2018 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில், திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரம், கீழ் வீதியில் விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார் என்று தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு... இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம்... விஜயகாந்த் உறுதி... 

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

dmdk

 

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தே.மு.தி.க கட்சி துவக்க நாளான இன்று (14.09.2020) தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதில் தே.மு.தி.க நிர்வாகிகள், தே.மு.தி.க அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்டம், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

முன்னதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், தே.மு.தி.க, தற்போது 16-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தே.மு.தி.க, தொடர்ந்து மக்கள் பணியாற்றி, தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.

 

கரோனா பாதிப்பால் கடந்த 6 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திப்பதோடு பலர் உயிரை இழந்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க தொண்டர்கள், தொடர்ந்து பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்குச் செய்து வருகின்றனர். தே.மு.தி.க தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்.

 

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதைக் கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம். வரும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க சிறப்பான வெற்றியைப் பெற்று மக்கள் சேவை ஆற்ற வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும். “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற தாரக மந்திரத்தின்படி தே.மு.தி.க தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

 

 

Next Story

எடப்பாடி கையை பிடித்து கேட்ட விஜயகாந்த்! ஓ.பி.எஸ்.ஸிடம் வருத்தம் தெரிவித்த பிரேமலதா!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019


 

அதிமுக கூட்டணியில் இணைவதை ஜவ்வு மாதிரி இழுத்தப்படியே இருந்த தேமுதிக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கூட்டணியை இறுதி செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. கூட்டணியில் 4 இடங்கள் என அதிமுகவும் தேமுதிகவும்  ஒப்பந்தம் செய்து கொண்டன. 
 

இதற்காக 10-ந் தேதி இரவு, இரு கட்சிகளின் தலைவர்களும் ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் சந்தித்தனர். அப்போது, அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், கே.பி.முனுசாமி, தேமுதிக தரப்பில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் 40 நிமிடங்கள் தனியாக ஆலோசித்தனர். 
 

அதில், "4 இடங்கள் என்பதை 6 இடங்களாக உயர்த்தி தரலாம்" எனக் கேட்டுப்பார்த்தார் பிரேமலதா. எடப்பாடியின் கைகளைப் பற்றிக்கொண்ட விஜயகாந்த், "பிரேமா, சொல்வதை யோசிக்கலாமே?" என வார்த்தைகளை மென்று விழுங்கியபடி பேசியிருக்கிறார். அதிமுக தலைவர்களுக்கு இது சங்கடமாகத்தான் இருந்தது. 

 

vijayagath-eps


அப்போது, "உங்களுக்கு கொடுக்கக்கூடாதுங்கிறது இல்லை. ஆரம்பத்திலேயே எங்களை நீங்கள் அணுகியிருந்தால் முரண்பாடுகளே வந்திருக்காது. எங்களிடம் பேசுவதை கெளரவக் குறைச்சலாக நினைத்துக்கொண்டு பாஜக மூலமாகவே பேசியபடி இருந்தீர்கள். அதான் பிரச்சனையே! இப்போ, திமுக 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதே அளவுக்கு அதிமுகவும் போட்டியிட வேண்டும். அதுதான் வலிமையாகத் தெரியும். திமுகவின் எண்ணிக்கையை விட குறைவாகப் போட்டியிட்டால் அதிமுக பலகீனமாகத் தெரியும். அது மொத்த கூட்டணியையும் பாதிக்கும். அதனால், 4 இடங்களை கூடுதலாக்கினால் அதிமுக 20-க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும்" என தெளிவாக விளக்கியிருக்கிறார். 
 

vijayagath-eps-ops


 

இதனை எல்லோரும் ஒப்புக்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேசமயம், அந்த 4 இடங்களில் 2 பொது தொகுதிகளையும், 2 தனித் தொகுதிகளையும் (ரிசர்வ்) ஒதுக்கீடு செய்ய அதிமுக தலைவர்கள் முடிவு செய்து வைத்துள்ளனர். அதற்கு பிரேமலதா, "பொதுத்தொகுதிகளில் மூன்றும், தனித்தொகுதி ஒன்றும் ஒதுக்குங்கள்" என கேட்டுக்கொள்ள, "கூட்டனியிலுள்ள கட்சிகளுக்கு பொது தொகுதிகளை பகிர்ந்தளித்திருப்பதால் அதன் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இருப்பினும் மற்றவர்களிடம் பேசுகிறோம். அவர்கள் ஒப்புக்கொண்டால் பொதுத் தொகுதியை கூடுதலாக்கித் தருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதே சமயம் அதற்கு வாய்ப்பில்லையெனில், எங்கள் மீது வருத்தப்படக்கூடாது" என சொன்னார் ஓபிஎஸ்!  
 

மேலும், அதிமுக கூட்டணியில் நீங்கள் இணையும் சூழலில், பத்திரிகையாளர்களிடம் அதிமுகவை விமர்சித்திருக்கக் கூடாது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என ஓபிஎஸ் சொல்ல, அதற்கு அதிமுக தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பிரேமலதா!