Skip to main content

எம்.எல்.ஏவுக்கு பவர் இல்ல.. விஜயபாஸ்கர் போட்ட ஆளுக்கு தான் பவர்- ஆடியோவால் பரபரப்பு

Published on 30/08/2019 | Edited on 31/08/2019

 

    அ.தி.மு.க உடைந்தபோது இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பேட்டி கொடுத்துவிட்டு தினகரன் – எடப்பாடி அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அறந்தாங்கி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி பிறகு தினகரன் அணிக்கு சென்றார். அதனால் அவரது தொகுதியில் நடக்க இருந்த பல நலத்திட்டங்களும் முடக்கப்பட்டது. ஜெ. முதல்வராக இருந்த போது 110 விதியின் கீழ் அறிவித்த அம்பலவானேந்தல் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு நிதி ஒதுக்கியும் கூட பணிகளை செய்யவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். 

 

a

 

நாடாளுமன்ற தேர்தல் வரை அந்தப் பக்கம் இருந்தவர் 18 எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது சரி என்று தீர்ப்பு வந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க விலேயே இணைந்தார். முதலமைச்சர் எடப்பாடியை அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று சந்தித்த பிறகு வெளியே வந்து.. தம்பி அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை அழைத்து வந்து இணைத்தார். நான் எப்போதும் அ.தி.மு.க காரன் தான். எனக்கு மக்கள் இரட்டை இலைக்கு தான் வாக்களித்தார்கள் என்றார்.


    அதன் பிறகும் அவரது தொகுதிக்குள் மக்கள் நலப்பணிகள் நடந்ததாக தெரியவில்லை. கட்சியில் இணைந்தாலும் தொடர்ந்து ஒதுக்கி வைத்திருக்கிறார்களா என்ற கேள்வி ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ வின் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது உண்மை தான் என்பதை பறைசாற்றும் வகையில் ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது.

 

r


    அமைச்சர் விஜயபாஸ்கரால் மணமேல்குடி அ.தி.மு.க ஒ.செ. வாக நியமிக்கப்பட்டுள்ள துரைமாணிக்கத்தின் ஆதரவாளரான ஓட்டுநர் பயிற்சி பள்ளி குமார் என்கிற அசோக்குமார் ஒரு டாஸ்மாக் ஊழியரிடம் செல்போனில் பேசும் அந்த ஆடியோவில்..


    மணமேல்குடியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளின் எண்களை கேட்கிறார். அந்த கடை எண்கள் என்று டாஸ்மாக் ஊழியர் 6651, 6701 என இரு கடைகளின் எண்களையும் சொல்கிறார். அதன் பிறகு அந்த கடைகளின் வாடகை, மற்றும் பார்க்கான தொகை எல்லாவற்றையும் கேட்டவர். அருகில் 7 கடைகளை உல்டா பண்ணி வரவிடாமல் தடுத்துவிடுவேன். அதனால நம்ம பார் நல்லா ஓடும் தானே என்றவர் அந்த ஒரு பாருக்கு மட்டும் ரூ. 35 ஆயிரம் வாடகை என்பதை கேட்டதும் அந்த கடை ஓனர்.......................... என்று தலித் என்பதால் அந்த ஜாதியை சொல்லி கண்டமேனிக்கு வசைபாடுகிறார்.

    தொடர்ந்து இந்த கடைகளுக்கு எம்.எல்.ஏ விடம் சிலர் பேசி வருவதாக டாஸ்மாக் ஊழியர் சொல்ல.. யாரைப் பார்த்தா நமக்கு என்ன? அவருக்கு எந்த பவரும் இல்லை மணமேல்குடி ஒன்றியத்தில.. விஜயபாஸ்கர் (அமைச்சர் என்ற மரியாதை எந்த இடத்திலும் இல்லை ) போட்ட ஆள் ஒ.செ. துரைமாணிக்கம். அதனால் எதுனாலும் துரைமாணிக்கம் சொன்னா தான் நடக்கும். துரைமாணிக்கம் சொன்னா விஜயபாஸ்கர் கேட்பார்.   


    இப்ப கூட 2 கோடிக்கு வேலை வந்தது எம்.எல்.ஏ தரப்பில் அவுக தம்பி பெரியகருப்பன் பேர்ல போட்டாங்க. ஆனா துரைமாணிக்கத்துக்கு ஒதுக்கி கொடுத்துட்டாங்க. அடுத்து ரூ. 65 லட்சத்துல ஒரு பாலம் அதையும் துரைமாணிக்கம் எடுத்துட்டார். பவர் இப்படி இருக்கு.


    எம்.எல்.ஏ வுக்கு பேரு கிடா.. வெட்டப்போற கிடானுதான் சொல்வாங்க. இந்த ஒன்றியத்துல எந்த பவரும் அவ... க்கு இல்லை. டாஸ்மாக் ஊழியர் ராமநாதன் இருக்கமாட்டார். 500 கையெழுத்து வாங்கி அவனை தூக்கிருவார் துரைமாணிக்கம். அவனை தூக்க முடியலன்னா ஒ.செ பதவியில இருக்க மாட்டார். 


    இதையெல்லாம் செய்ய முடியலன்னா பதவி கொடுத்த ஆளுக்கு என்ன மரியாதை என்று சுமார் 10 நிமிடம் அந்த உரையாடல் தொடர்கிறது.
    இந்த ஆடியோ வெளியான நிலையில் தலித் அமைப்பினர் தங்கள் இனத்தை இழிவாக பேசிய அசோக்குமார் மீது நடவடிக்கை எடு என்று மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


    அதே போல எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி தரப்பு அசோக்குமாரை தேடி வருகிறார்கள். அதனால் அசோக்குமார் யார் கண்ணிலும் படாமல் இருக்கிறார்.
    அண்ணனை மறுபடியும் அமைச்சர் கட்சிக்கு கொண்டு வந்தார். ஆனால் பழையபடியே எல்லாம் நடக்குது. இது அவருக்கு தெரிஞ்சு நடக்குதா? தெரியாமல் நடக்குதா என்பது தெரியல. அவர் கவனத்திற்கும் கொண்டு போயாச்சு. நடவடிக்கை எடுப்பார்னு நம்புறோம் என்றனர் எம்.எல்.ஏ தரப்பினர்.


    மேலும் பல ர.ர.க்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில ஆண்டுகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்த போது அறந்தாங்கி,  மணமேல்குடி, ஒன்றியங்களில் 3 ஒ.செ.க்களையும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக நியமனம் செய்திருக்கிறார். அடுத்து அறந்தாங்கி நகரத்திலும் அதே சமூகத்திற்கு கொடுங்கள் என்று சிலர் முன்னால் நிற்கிறார்கள். ஆனால் 3 வருடம் முன்பு இப்படி கொடுத்ததால் பல கிராமங்களில் அ.தி.மு.க வினர் கூட்டங்களை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அப்போது இனி இப்படி ஒரு தவறு நடக்காது என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னது போல நடக்கல. அதனால மறுபடியும் கிராமங்கள் தோறும், கிளைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டியது தான் என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

”100 சதவீதம் நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம்” - விஜயபாஸ்கர்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
 We are 100 percent against BJP says Vijayabaskar

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா  தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் எதிரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அதிமுக வேட்பாளர் கருப்பையா அனைவரையும் வரவேற்றார்.

திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன்,அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக ப.கருப்பையா அறிவித்த நாள் முதல் தற்போது வரை ஜெட் வேகத்தில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக ஊரெல்லாம் ஒரே பேச்சு கருப்பையா இரட்டை இலை சின்னத்தில் மகத்தான வெற்றியை பெறுவார் என்ற செய்தி திருச்சி தொகுதி முழுவதும் சென்றடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

எந்தப் பணியிலும் தொய்வில்லாமல் திருச்சியின் குரலாக நாடாளுமன்றத்தில் கருப்பையாவின் குரல் ஓங்கி ஒலிப்பதற்காக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதன் காரணமாக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அது எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையும் தருகிறது. நிச்சயம் அவர் நூற்றுக்கு நூற்று பத்து சதவீதம் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

திருச்சியினுடைய ஒட்டுமொத்த குரலாக நாடாளுமன்றத்தில் துடிப்புமிக்க இளைஞனுடைய குரலாக ஒலிக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரத்தத்தில் ஊறிய எதிரி திராவிட முன்னேற்ற கழகம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை .மூன்றாண்டு காலம் இவர்களுடைய ஆட்சியில் மக்களிடையே மிகப்பெரிய வெறுப்பும், அதிருப்தியும் இருக்கிறது.

பாஜகவோடு கூட்டணியில் இருந்த போதே நீதிமன்றம் மூலமாக மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தனித்தன்மையுடன் கொள்கையோடு இருக்கும். தொடர்ந்து நீங்கள் அதைப் பார்க்கப் போகிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி எதற்கும் துணிந்தவர். 100 சதவீதம் பாஜகவை நாங்கள் எதிர்க்கிறோம். அதை தெளிவாக எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்திவிட்டார். நாங்கள் அமைத்துள்ள கூட்டணியின் மூலம் மகத்தான வெற்றியைப் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.