இஸ்ரேல் - பாலஸ்தீன போர்; விஜய் ரசிகர்கள் எடுத்த முன்னெடுப்பு

Vijay fans observed 2 minutes of silence to demand an end to Israel-Palestine war

நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள லியோ திரைப்படத்தை, முதல் காட்சியை திரையரங்குகளில் காண வந்துள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிலையில், ஆங்காங்கே சில நிகழ்வுகளையும் அரங்கேற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மெய்நின்றநாத சுவாமி ஆலயத்திலிருந்து திரையரங்கம் வரை ஊர்வலமாக சென்றவர்கள் திரையரங்க வாசலில் நின்று, இலங்கையில் இன அழிப்பு நடந்து அங்கு மக்கள் வாழ முடியாமல் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள். அதே போல தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் பச்சிளங்குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இது போன்ற உயிரிழப்புகளை யாரும் விரும்புவதில்லை. அமைதியை மட்டுமே மக்கள் விரும்புகிறோம்.

ஆகவே தான் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காவும், போரை உடனே நிறுத்தி அமைதியை நிலைநாட்டக் கோரியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 2 நிமிடம் மௌன காத்து நிற்கிறோம்” என்றனர்.

pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe