Skip to main content

திருச்சியில் இனிமேல் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை! ஏன் தெரியுமா ?

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

 

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி திரைப்படம் நாளை  வெளியாக உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் படத்தை வெளியிடக் கூடாது என ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

 

v

 

திருச்சி மாவட்டத்தில் சக்திவேல் என்ற விநியோகஸ்தர்தான் கோமாளி படத்தையும் வெளியிடுகிறார். இவரின் உதவியுடன் ஜி.டி என்று அழைக்கப்படும் தியாகராஜன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை அவுட்ரேட் பேசி 3.40 கோடிக்கு வாங்கியிருக்கிறார். 

ஆனால் மிஸ்டர் லோக்கல் நஷ்டத்தை அவர் ஈடு செய்ய வேண்டும் என கூறி திருச்சியைச் சேர்ந்த ஜி.டி என்று அழைக்கப்படும் தியாகராஜன் தலைமையில் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். நஷ்ட ஈடாக படத்தை கொடுக்க வேண்டும்.  இல்லை என்றால் கோமாளி படத்தை திருச்சி மாவட்டத்தில் திரையிட மாட்டோம் என்று கூறி, கோமாளி படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.

 

k


திருச்சி மாவட்டத்திற்கு  உட்பட்ட ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள், வருகின்ற 15-ம் தேதி வெளியாக இருக்கின்ற "கோமாளி" திரைப்படத்தினை திருச்சி ஏரியாவில் வெளியிடமாட்டோம் என்று கூறியது சம்பந்தமாக இன்று தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது.    இதில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, சிங்காரவேலன், நித்தின் சத்யா, ஜே.எஸ்.கே சதீஸ்குமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

 

இந்த பேச்சு வார்த்தையில்,  ஒரு திரைப்படத்தை அவுட்ரேட் பேசி எடுத்து விட்டால் அதிலிருந்து லாபமோ, நஷ்டமோ ஏற்பட்டால் அது யாரையும் கட்டுபடுத்தாது என்கிற விதிமுறை இருக்கும் போது, அவர் பேசிவிட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தற்போது பணம் கேட்டு மிரட்டுவது  மிகவும் கண்டிக்க தக்கது என்று பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. 

 

மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கோமாளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,  திருச்சி மாவட்டத்தில் மட்டும் கோமாளி திரைப்படத்திற்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. பணம் பாக்கி எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்கின்ற தன்னிடம் பணம் கேட்பது எந்த நியாயமும் இல்லை என்று கூறினார்.

 

ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள் பணம் பறிக்க செய்கின்ற இந்த கட்ட பஞ்சாயத்துகளினால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் திருச்சி பிரான்சிஸ் ,மீனாட்சி சுந்தரம் ,ராதா, மீனா போன்றோர் மீது நாளை முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம் என்றார்கள். ஆனால் முதல்வரை சந்திக்க நேரம் கிடைக்காதால் இது சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் கடம்பூர் ராஜிடம் திரைப்படத்தின் உரிமையாளர்கள் மற்றும் தியாகராஜன் மீது புகார் கொடுத்தனர்.  அதன் அடிப்படையில் அமைச்சரின் செயலாளர் திருச்சி, மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு விசாரணை நடத்த சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்கள். 

 

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பேசி சுமூகமாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நடக்காத பட்சத்தில் இனி வரும் காலங்களில் எந்த ஒரு திரைப்படத்தையும் திருச்சி ஏரியாவில் வெளியிடுவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.