Published on 29/10/2020 | Edited on 29/10/2020
தமிழகத்தில் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 55,420 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.