Skip to main content

மின்துறை அமைச்சரின் ஆசிபெற்ற அதிகாரி மீது பாய்ந்த விஜிலென்ஸ்...!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

மின்துறை அமைச்சர் தங்கமணியின் ஆசிபெற்ற அதிகாரியாக இருப்பவர் மின்வாரிய தலைமை பொறியாளர் நந்தகோபால். கடந்த ஜனவரி 2ந்தேதி வேலூரில் உள்ள மின்துறையின் ஆய்வு மாளிகையில் 2020 ஆங்கில புத்தாண்டையொட்டி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பணியாற்றும் துறை அதிகாரிகளிடம் ஆங்கில புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

 

Vigilance Department-Government officer

 



வாழ்த்துக்கள் என்கிற பெயரில் ஒவ்வொரு அதிகாரியும் தங்களது பதவிக்கு தகுந்தார்போல் தங்ககாசு, பணம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அவருக்கு பரிசாக வழங்க வேண்டும், அப்படித்தான் வழங்கிக்கொண்டு இருந்தார்கள். இதுப்பற்றி அத்துறையை சேர்ந்த சிலர் வேலூர் லஞ்சஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதனிடம் தகவல் கூறியுள்ளனர். அவர் ஆய்வாளர்கள் விஜய், ரஜினிகாந்த், விஜயலட்சுமி தலைமையில் தனித்தனியாக அந்த அலுவலகத்தை கண்காணிக்க வைத்தனர். மதியம் முதல் இவர்களது அணி கண்காணிப்பில் ஈடுப்பட்டு பரிசு பொருட்கள் தருவதை உறுதி செய்தனர்.

தலைமை பொறியாளர் நந்தகோபாலோடு, கிருஷ்ணகிரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சாக்கன் ஆகியோர் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு ஜனவரி 2ந்தேதி மாலை அந்த மாளிகைக்குள் புகுந்து இருவரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். செல்போன்களை பறிமுதல் செய்து அதனை சுச் ஆப் செய்தனர்.

அதன்பின் அவர்களுக்கு வந்த பரிசு பொருட்களான பணம் மற்றும் தங்ககாசுவை எண்ணியபோது, 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 48 கிராம் தங்க நாணயம், வெள்ளி பொருட்கள் மற்றும் 30 செட் விலை உயர்ந்த சபாரி செட் துணியை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை தொடர்பாக துறை தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.

உங்களுக்கு பரிசு பொருட்கள் தந்தது யார், யார் என தகவலை அந்த அதிகாரிகளிடம்மே பெற்ற போலீஸார், அது தொடர்பாக ஒரு பட்டியலை தயார் செய்ய தொடங்கியுள்ளனர். அவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Chief Minister M.K. Stalin's praise

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான நேற்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார்.  அதன்படி தேவி சம்பத் என்ற பெண்மணிக்கு இந்த திட்டத்திற்கான முதல் ஏடிஎம் கார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

இதையடுத்து இந்த திட்டம் குறித்த காணொளி விழாவில் ஒளிபரப்பப்பட்டது. விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

 

இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி, மாநகராட்சிப் பணியாளர்கள்,  தமிழ்நாடு மின்னணு பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன். களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

Next Story

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி; கையும் களவுமாக பிடித்த போலீசார் 

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

ariyalur district rural development women authority issue 

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர் அரசுத் திட்டப் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரராகவும் உள்ளார். தற்போது இவர் ஊரக வளர்ச்சித் துறையில் நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களில் உலர் களம் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்தப் பணிகளைச் செய்து முடித்து இதற்கான தொகையைப் பெறுவதற்காக தனக்கு இரண்டு சதவீத கமிஷன் பணம் தர வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறையின் கோட்ட அதிகாரியாகப் பணி செய்து வரும் வஹிதா பானு என்ற பெண் அதிகாரி கராராக மணிமாறனிடம் பணம் கேட்டுள்ளார்.

 

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மணிமாறன் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி நேற்று கமிஷன் தொகையாக ரூபாய் 30 ஆயிரம் பணம் தருவதாகவும் அதைப் பெற்றுக் கொள்வதற்கு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதிக்கு வருமாறு மணிமாறன் வஹிதா பானுவுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி வஹிதா பானு அந்த இடத்திற்கு நேரில் சென்று மணிமாறனிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தைப் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வஹிதா பானுவை லஞ்ச பணத்துடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். ஒரு பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி உள்ள சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.