Skip to main content

‘ஈஷாவுக்கு வந்தேன்.. மாட்டிக்கிட்டேன்..’ - இளம் நடிகையின் வீடியோ வைரல்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

video actress visiting Isha Center Coimbatore with her boyfriend going viral.

 

யாராச்சும் காப்பாத்துங்க.. என்கிட்டே இவன் தப்பா நடக்க ட்ரை பண்றான்.. என முகத்தில் காயங்களுடன் நடுரோட்டில் இறங்கி துணை நடிகை ஒருவர் கூச்சலிடும் வீடியோ காட்சிகள் மதுரையில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை அருகே உள்ளது நேரு நகர் பிரதான சாலை. இங்கு வந்த இளம் ஜோடி சொகுசு காரின் உள்ளே இருந்தபடி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டு அடித்துக் கொண்டதை அப்பகுதியில் இருந்த மக்கள் கவனித்துள்ளனர். ஆரம்பத்தில், ஏதோ தனிப்பட்ட விவகாரம் என நினைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போயுள்ளனர். ஆனால், அடிதடியும் சத்தமும் அதிகரிக்கவே, கார் கதவை திறக்கச் சொல்லி என்ன பிரச்னை என மதுரை தமிழில் கேட்டுள்ளனர். அப்போது அந்த பெண் துணை நடிகை என்றும், அந்த இளைஞர் தன்னை வழக்கறிஞர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். 

 

“எதுவா இருந்தாலும் உங்க வீட்டுக்கு போய் பேசிக்கொள்ளுங்கள்.. இது பொதுவான இடம்.. இங்கே வைத்துக் கொள்ளாதீர்கள்” என எச்சரித்துள்ளனர். ஆனால், அந்த இளம் ஜோடியோ, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் மழை பொழிந்துள்ளனர். இது என்னப்பா.. பெரிய சிக்கலா இருக்கும் போலவே என நினைத்த மக்கள், உடனடியாக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில், “உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா மகள் அங்கீதா பட்டாச்சாரியாதான் இந்த பெண் என்பதும், அவர் துணை நடிகையாக இருந்து வருவதும் தெரியவந்தது. அதேபோல, உடனிருந்த இளைஞர் பீகார் மாநிலம் ராம்நகர் வெஸ்ட் பகுதியை சேர்ந்த மனோஜ் பாண்டேவின் மகனான நிதிஷ்குமார் என்பதும் தெரியவந்தது. மும்பையில் இருந்து இருவரும் மகா சிவராத்திரி திருவிழாவிற்காக கோவையில் நடைபெற்ற ஈஷா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து கோவையில் வாடகை கார் எடுத்து இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டு நேற்று மதுரையில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறுதான் ரோட்டில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு வந்ததும் தெரியவந்தது. எதனால் தகராறு வந்தது என போலீசார் இருவரிடம் விசாரணை செய்ததில், “நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தோம். ஆனால், தனது ஆண் நண்பர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்றும், அதோடு தனது பணத்தையும் எடுத்து கொண்டதாகவும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறினார். பதிலுக்கு அந்த இளைஞரும் இவள் தவறான பெண் எனக் கூறினார். இருவரையும் விசாரணை செய்த காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன், இருவரிடமும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து மதுரை வந்து ரோட்டில் நின்று சண்டையிட்ட துணை நடிகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.