Skip to main content

துணை வேந்தர்கள் மாநாடு... ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரபரப்பு பேச்சு!

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

hjk

 

தற்போதைய கல்வி முறைகளில் பெரிய அளவிலான மாற்றம் தேவை எனப் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார். 

 

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் என்று கூறி, இன்று சட்டப்பேரவையில் புதிய மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது தமிழக அரசு. இந்த மசோதாவுக்கு பாஜக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்த சம்பவங்கள் ஒருபுறம் நடைபெற்று வந்த நிலையில், இன்று ஊட்டியில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநரின் பேச்சு பரபரப்பைக் கூட்டியுள்ளது. 

 

அதில் பேசிய அவர், " நடப்பு கல்வி முறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவைப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கமளித்து வேலை வாய்ப்பை பெருக்கக்கூடிய கல்வி முறையைத் துணை வேந்தர்கள் உருவாக்க வேண்டும். 2014ம் ஆண்டு பின்னர் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்திற்கு நம்முடைய பங்கும் இருக்க வேண்டும்" என்றார். தமிழக அரசு வேந்தர்களை ஆளுநர் நியமிக்கத் தடை போடும் விதமாக மசோதா கொண்டுவந்துள்ள நிலையில் ஆளுநர், பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் பங்கேற்கும் மாநாட்டைக் கூட்டி, கல்வி முறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவைப்படுகிறது என உரையாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ள பாதிப்புகள் குறித்த ஆலோசனையில் மாநில அரசு பங்கேற்கவில்லை; ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
The State Government did not participate in the South District Flood Impacts Consultation; Governor's House Allegation

கன்னியாகுமரி ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் படிப்படியாக சீரடைய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் நடத்திய வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டை தமிழக ஆளுநர் மாளிகை முன் வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்பு படை, விமானப்படை, ரயில்வே துறை உயர் அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் மாநில அரசும் அதன் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. மழை பாதிப்பால் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது, மாநில அரசு அழைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை செய்ய மத்திய அரசு துறையில் தயாராக உள்ளதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கூட்டத்தில் பங்கேற்ற சில மத்திய அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மீட்புகளை மேற்கொள்வது தொடர்பாக தெளிவற்ற நிலை இருப்பதாக கவலை தெரிவித்தனர் என்றும் ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டி உள்ளது.

Next Story

“டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது” - கவிஞர் வைரமுத்து

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Vairamuthu's comment on Sankaraiah not conferring doctorate

 

தமிழ்நாடு அரசு சார்பில் 100 வயதைக் கடந்து வாழும் சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனையேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக செனர் மற்றும் சிண்டிகேட், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். மேலும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்திருந்தார். 

 

இந்த நிலையில் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்காதது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

 

“டாக்டர் பட்டத்தைவிட
சங்கரய்யா என்ற
பெயர்ச்சொல் மேலானது

இந்தத்
தப்புத் தாமதத்திற்குப் பிறகு
ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா
அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும்

பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத
மதிப்புறு முனைவர்
பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின்
தியாகம் பெரிது

கொள்கை பேசிப் பேசிச்
சிவந்த வாய் அவருடையது
இனி இந்த
வாடிப்போன வெற்றிலையாலா
வாய் சிவக்கப் போகிறது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.