Skip to main content

ஜெ. ஆட்சியில் ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்களுக்கு நேர்காணல் நடந்ததுண்டா? அமைச்சர்களுக்கு கி.வீரமணி கேள்வி

Published on 09/04/2018 | Edited on 09/04/2018
K. Veeramani Dravidar Kazhagam


 

எதற்கெடுத்தாலும் அம்மா அரசு, அம்மா அரசு என்று கூறும் அ.தி.மு.க. அரசுக்கு ஒரு கேள்வி - அம்மா ஆட்சி காலத்தில் துணைவேந்தர்களுக்கான நேர்காணல் ஆளுநர் மாளிகையில் நடந்ததுண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கல்வித் துறையைக் காவி மயமாக்கும் தீவிரப் பணியை மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மேற்கொண்டு வருகிறது. முன்பு பல பதவிகள், பொறுப்புகள் வகித்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர்களைக் கொண்டு முக்கிய பதவிகளை வெகுவேகமாக நிரப்பிக் கொண்டு வருகிறது.
 

தமிழ்நாட்டில் ஒரு தலையாட்டி பொம்மை அரசு
 

தமிழ்நாட்டில் உள்ள டில்லியின் ஒரு பொம்மலாட்ட அரசு, தலையாட்டித் தம்பிரான்கள் மாநில உரிமைகள் பறிப்புக்குத் துணை போகும் அவலம் தொடர்கிறது; எடுத்துக்காட்டாக,
 

1. நீட் தேர்வுக்கான தமிழ்நாட்டிற்கு விதிவிலக்குக் கோரி இரண்டு மசோதாக்கள் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் - எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்போடு ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பி, ஏறத்தாழ 16 மாதங்கள் ஆகியும், இன்னமும் அதற்குரிய ஒப்புதலோ அல்லது நிராகரிப்போ இன்றி வெகு அலட்சியத்தோடு - கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தோழர் டி.கே.ரெங்கராஜன் அவர்களின் கேள்விக்கு, உள்துறை அமைச்சகத்திற்கேகூட அனுப்பி வைக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரால் பதில் சொல்லப்படுகிறது.

அதுபற்றி தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இன்றுவரை எந்த முயற்சியை எடுத்தது? கேள்வியை எழுப்பியது? வலியுறுத்தக்கூட இல்லையே! இத்தனைக்கும் 50 எம்.பி.,க்களைக் கொண்ட கட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொண்டும்கூட!

அறுக்கமாட்டாதவர் இடுப்பில் 1008 அரிவாள்கள் இருந்து என்ன பயன்?
 

சந்திப்புக்குக்கூட  பிரதமர் நேரம் அளிக்காதது ஏன்?
 

2. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டிய தேவை - நியாயங்களை எடுத்துச் சொல்ல ஒரு பேட்டி காண, கடிதம் எழுதினார் முதலமைச்சர்; தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமரிடம் மேடையிலேயும் சொன்னார், எந்தப் பதிலும் சொல்லாமல், அலட்சியப் புன்னகையுடன் பிரதமர் திரும்பினார்! இதைவிட தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு வேறு உண்டா?

இதற்கு ஏதாவது சிறு மறுப்பு - அழுத்தம் தரும் வகையில் பதவி ராஜினாமா போன்ற நடவடிக்கைகள் ஏன் இல்லை?

மத்திய அரசைக் கண்டிக்கும் வாசகம் உண்டா?

மார்ச் 3 ஆம் தேதி தனியே பட்டினிப் போராட்டத்தை அறிவித்து - அனைத்துக் கட்சிகள் - விவசாய அமைப்புகளை அரவணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடே ஒன்றுபட்டுள்ளது என்று காட்டவேண்டிய ஒரு பொதுப் பிரச்சினையை, வெறும் கட்சிப் பிரச்சினைபோல அ.தி.மு.க. அரசு கையாண்டது நியாயம்தானா?

அதில் நிறைவேற்றிய தீர்மானம் ஒப்புக்குச் சப்பாணியாக மத்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கும் ஒரு சிறு வாசகம்கூட இடம்பெறாதது ஏன்?
 

தமிழக முக்கிய அமைச்சர்கள் ஆளுநரைப் பார்த்து விளக்கம் கூறி வருவது அதைவிட அவமானம் அல்லவா? குதிரை கீழே தள்ளியதோடு அது குழியும் பறித்த கதை அல்லவா இது?

பல்கலைக் கழகங்களுக்கு வெளிமாநிலத்தவர்களா?

தமிழ்நாடு கலை மற்றும் நுண்கலைப்  பல்கலைக் கழகத்துக்கும் ஒரு கேரளத்தவரை - தகுதியுள்ள, ஒடுக்கப்பட்ட சமூகத்தவரைப் புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட ஒருவரை ஆளுநர் நியமித்தது எந்த வகையில் நியாயம்?

அதேபோல், சட்டப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு ஆந்திரப் பார்ப்பனரான ஆர்.எஸ்.எஸ்.காரர் நியமனம்.

 

anna university vice chancellor M.K. Surappa


 

இப்போது பிரபல அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ஒரு வெளிமாநிலத்தவரை - கருநாடகத்தவரை துணைவேந்தராக நியமித்துவிட்டு, மலைபோல் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், ஆளுநர் மாளிகை எல்லாம் முறைப்படிதான் நடைபெற்றுள்ளது என்று - ஒரு டெக்னிக்கலான விளக்கம் தருவதை அரசியல் சட்ட ரீதியாகவோ, முந்தைய நடைமுறை மரபுப்படியோ நியாயப்பபடுத்த முடியுமா? விளக்கம் அளிப்போருக்கும், தலையாட்டும் சில அமைச்சர்களுக்கும் சேர்த்து சில கேள்விகளை முன்வைக்கிறோம். பதில் கூறுவார்களா?
 

1. ஆளுநர் துணைவேந்தர்களை நேரிடையாக நேர் காணல் நடத்தி, நியமன ஆணை வழங்கும் அரசியல் கூத்து, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியவர்கள் முதலமைச்சர்களாக இருந்த காலத்தில் எங்காவது ஒருமுறையாவது நடந்ததாகக் காட்ட முடியுமா?

மூச்சுக்கு முன்னூறு தடவை  அம்மா ஆட்சி என்று கூறுகின்றனரே, அந்த அம்மா உயிருடன் இருந்து ஆட்சி செய்தபோது, ஆளுநர்கள் இப்படி நடந்துகொண்டதாகக் காட்ட முடியுமா? ஆளுநர் நியமனம் செய்து அதற்கு விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டதுண்டா?

தலையாட்டும் தம்பிரான்கள் கூறட்டும்; அது மட்டுமா? 

ஆளுநர் வேந்தர் என்பதெல்லாம் கூட ex officio தகுதியினால் மட்டுமே! அது தனிப் பதவி அல்ல.

 

jayalalitha



இந்த நேர்காணல் என்ற கோணல், நியமனம் எல்லாம் கடந்த ஒன்றரை ஆண்டு - ஜெயலலிதா மறைந்த பின்புதானே நடக்கிறது - மறுக்க முடியுமா?
 

ஆளுநர் உரை என்று கூறி, சட்டமன்றத்தில் உரை நிகழ்த்துகிறாரே, அதை அவரே எழுதித் தயாரித்துத்தான் படிக்கிறாரா?

நடைமுறையில் அவ்வுரை அமைச்சரவையால் தயாரிக்கப்படும் ஒன்று என்பது யாருக்குத்தான் தெரியாது?

இதுதான் அம்மா ஆட்சியா?
 

அதுபோன்றதுதான் துணைவேந்தர்கள் நியமனமும்! இதை அறியாத அறிதொறும் அறியாமையுடன் அமைச்சர்கள் பதில் சொல்லி வருவது, வளைந்து கீழே குனிந்து நடப்பது மாநில உரிமையை அடகு வைத்த மகத்தான செயல் அல்லவா?
 

எல்லாம் சரியான நடைமுறைப்படிதான் என்றால், தேடல் குழுவில் கூட இப்படி வெளிமாநிலத்தவர் முன்பு இடம்பெற்றது உண்டா?

இதில் விளக்கம் கூறி, வெட்கப்படாதீர்கள்! அம்மா இருந்திருந்தால் இப்படியா நடந்திருப்பார்? என்ற கேள்விக்குப் பதில் உண்டா?
 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...

Next Story

“பா.ஜ.கவினருக்கு எதையும் நேரடியாக சொல்லும் பழக்கம் கிடையாது” - மாணிக்கம் தாகூர்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress candidate Manikam Tagore says What does Nirmala Sitharaman know in interview for loksabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதியில் ஒன்றான விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி பின்வருமாறு...

காங்கிரஸ்காரர்கள் பா.ஜ.கவை பற்றி மக்களிடத்தில் ஒரு பொய்யான பயத்தை உருவாக்குகிறார்கள் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“திருடப் போகிறவர்களை பிடித்தால் அவர்களிடம் எந்த மாதிரியான பதற்றம் உருவாகுமோ அந்த மாதிரியான பதற்றம் தான் மோடியிடம் இருக்கிறது. குஜராத் மாநிலத்திற்கு சென்றால் அங்கு சிறுபான்மையினர் மக்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 25 வருடமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்பி கூட அங்கு கிடையாது. அங்கு 9 சதவீத சிறுபான்மையின மக்கள் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் கூட இல்லாமல், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் ஒரு கட்சி நடத்த முடியுமா?.ஆனால் அங்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரையில் இதனைத் தொழிலாக வைத்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் இதை அவர்களுடைய கொள்கையாக வைத்திருக்கிறது. சிறுபான்மை மக்களை ஓரங்கட்டி, அவர்களை நிராயுதபாணியாக ஆக்க வேண்டும், அவர்களை கேவலப்படுத்த வேண்டும், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் வேலை”.

தென்மாநிலங்களில் வெற்றி பெறும் காங்கிரஸ் கூட்டணி வட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஏன் வெற்றி பெற முடியவில்லை?

“காங்கிரஸினுடைய மொத்த அரசியலுமே ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் பாஜக, ஆங்கிலயேர்களுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் முகலாய படையெடுப்புகளை மையமாக வைத்து தான் அவர்களுடைய அரசியல் இருந்திருக்கிறது.  வட மாநிலங்களில் ஆங்கிலேயர்கள், இந்து - முஸ்லிம்  மக்கள் இடையே பல காலமாக விரிசலை கொண்டு வந்தார்கள். இந்து - முஸ்லிம் கலவரங்கள் நிறைய நடந்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தான் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வருகிறது.

100 வருடத்திற்கு முன்பாக இந்து மக்களை மையப்படுத்தி தான் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வந்தது. அதற்கேற்றார் போல் இந்தியா- பாகிஸ்தான் பிரிகிறது. அப்பொழுது இங்கு இருக்கக்கூடிய இந்து மக்கள் அகதிகளாக அங்கு செல்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள் இங்கு அகதிகளாக வருகிறார்கள். இந்த அரசியல் களம் அவர்களுக்கு நல்ல களமாக அமைந்துவிட்டது.

ஆனாலும் 1947 இல் இருந்து 1967 வரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் நடந்த உட்கட்சி பூசலால் அங்கிருந்த முக்கிய தலைவர்கள் அங்கிருந்து பிரிந்து புதிதாக கட்சி தொடங்கினர். அந்தக் கட்சியோடு சேர்ந்து ஜன சங்கம் என்ற கட்சியை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி உள்ளே நுழைந்து ஆட்சி அமைத்து எழுபதுகளில் முதல் தடவையாக பாஜக அரசியலில் வருகிறது. அரசாங்கத்தில் அவர்கள் நுழைந்தவுடன் அனைத்தையும் கண்ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை பொருத்தவரை மாநிலக் கல்வி துறைகளில் மிகப்பெரிய ஊடுறவுகள் வந்திருக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதி வந்திருக்கிறார்கள். வரலாற்றை மாற்றுவதை அவர்கள் பலகாலமாக முயற்சி செய்து வருகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, திருவள்ளுவருக்கு திடீரென்று காவி கலரை போட்டுவிட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, வரலாற்றை திரித்து சொல்வது தான். அவர்கள் வடமாநிலங்களில் மத துவேசத்தை நார்மல் செய்து விட்டார்கள். பாஜக காரனுக்கும் ஆர்.எஸ்.எஸ் காரணுக்கும் என்றைக்குமே அவர்களுடைய கருத்தை நேரடியாக சொல்கிற பழக்கமே கிடையாது. எடப்பாடி பழனிசாமி மூலமாகவோ, ஜெயலலிதா மூலமாகவோ தான் வருவார்கள். மற்றவர்களின் தோளில் ஏறி நான் நல்லவன் என்ற கதையைச் சொல்லிதான் வருகிறார்கள்”.

காங்கிரஸ் செய்த தவறுகளை 10 வருடத்தில் நாங்கள் சரி செய்து விட்டோம் என்று கூறுகிறார்களே? 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம் என்றும் கூறுகிறார்களே?

“ஒரு சிலரை மட்டும் பணக்காரர்களாக்கி மொத்த ஊர்களையும் ஏழ்மையாக்கி வைத்திருக்கிறார்களே. கடந்த வருட டேட்டாவை எடுத்துப் பார்த்தால் 62% வேலையாக கொண்டாட்டம் இந்தியாவில் இருக்கிறது என்று கூறுகிறது. இதற்கு யார் காரணம்? அதானியையும், அம்பானியையும் மட்டும் பணக்காரர்களாக உருவாக்கி இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டது என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை”.

வளர்ச்சி.., வளர்ச்சி...,வேண்டும் மீண்டும் மோடி என்று சொல்லி பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் இந்த மாதிரியான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது?

“அவர்கள் சொல்கிற வளர்ச்சி, அதானியுனுடைய வளர்ச்சியை மட்டும்தான் அவர்கள் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி அதானி, வளர்ச்சி அம்பானி என்பதுதான் அவர்களது உண்மையான கொள்கை. விவசாயிகள் பிரச்சனையில் இருக்கிறார்கள். விவசாயிகளின் நிலைமை மிகவும் கொடுமையாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தலை விரித்து ஆடுகிறது. சிறுகுறு தொழில்கள் ஜிஎஸ்டி வரியினால் அழிந்து போய்விட்டது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து”.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பும், பின்பும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து தி.மு.க.வையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? களம் எப்படி இருக்கிறது?

“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல தேர்தல் வரும் முன்னே மோடி வருவார் பின்னே என்ற கதைதான். எப்போது தேர்தல் வருமோ, அப்போது தமிழ்நாட்டுக்கு ஓடி வருவார். வந்து வாயில் வடை சுடுவார்.  அனைத்து கதையும் சொல்லிவிட்டு போய்விடுவார். சென்னை வெள்ளம் வந்த போதும் தென்மாநிலங்களில் நிகழ்ந்த வெள்ளத்தின் போதும் என்ன செய்தார்? முதலில் அவர் காது கொடுத்து கேட்டாரா?. அந்தச் சமயத்தில் நிதியமைச்சரை அனுப்புகிறார்கள். நிதியமைச்சருக்கு என்ன தெரியும், பாவம். நிர்மலா சீதாராமனை பார்த்தால் பாவமாக தெரிகிறது” என்று கூறினார்.