Skip to main content

இது விபூதி சேலஞ்ச்......

Published on 18/05/2020 | Edited on 18/05/2020


சவால் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது போல் கறுப்பு- வெள்ளை போட்டோ சேலஞ்ச், அந்தக் கால போட்டோ சேலஞ்ச் என வித விதமாகச் சேலஞ்ச்களை அறிமுகப்படுத்தி டிரெண்ட் செய்வார்கள் சமூக வலைத்தள வாசிகள்.! ஜாலி சேலஞ்ச்களை புறந்தள்ளி ஆரோக்கியத்திற்கு அக்கறைக் காட்டி சேலஞ்ச் செய்து வரும் வலைத்தள வாசிகள் இந்த முறை சேலஞ்சாக கையிலெடுத்திருப்பது நெற்றி நிறைய பட்டையுடனான விபூதி சேலஞ்சை.!
 


தங்களை மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ..? என்று கருதியே நெற்றி நிறைய விபூதி பட்டை பூசியவர்கள் இன்று பட்டையை குறுக்கி சிறு கீற்றாக விபூதியை அணிகிறார்கள். ஒரு சிலர் அதனையும் செய்வதில்லை. ஆனால் இந்த விபூதி சேலஞ்ச் வந்தவுடனே சிறியவர் தொடங்கி பெரியவர் வரை அனைவரும் நெற்றி நிறைய விபூதி பூசிய புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு, "இது எப்படி இருக்கு..? இது தான் விபூதி சேலஞ்ச் என்கிறார்கள்.

விபூதி.!

 

மரணத்திற்குப் பிறகு பின் தீயில் எரிந்து பின் கிடைப்பது பிடி சாம்பல் தான் என நினைவு கூறுவதே விபூதி தத்துவம். சைவர்களின் அடையாளமாய், திரள் செல்வத்தின் அடையாளமாய் கருதப்படுவது விபூதி. பதினென் சித்தர்களில் ஒருவரான திருமூலரோ,

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே!

என விபூதியைத் தினமும் அணிந்து வந்தால் தொல்லைகள் அனைத்தையும் அழித்து இறைவனின் திருவடி சேரலாம் என்கின்றார். சைவர்கள் விரும்பும் விபூதியைக் கல்பம், அணுகல்பம், உபகல்பம் மற்றும் அகல்பம் என நான்கு முறைகளாகப் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் கல்பம் முறை தான் தற்பொழுது அனைவராலும் விரும்பப்படுகின்றது. அதாவது, நாட்டுப் பசு மாட்டின் சாணத்தை கீழே விடாது தாமரை இலையில் பிடித்து உருண்டைகளாக்கி ஐந்து வகை பிரம்ம மந்திரங்கள் கூறி அக்கினியில் எரித்து எடுப்பது தான் கல்பம் முறை. 
 


இந்தக் கல்பம் முறையில் விபூதி தயாரித்து வரும் சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சம்பத்தோ, "அடிப்படையில் நகைத் தணிக்கையாளரான எனக்கு நாட்டு பசுமாடுகள் மேல் ஆரம்பத்திலிருந்து பிரியம். நாட்டுப் பசுமாடுகள் பண்ணை வைக்கனும்னு திட்டம் இருக்கும் போதே, பலர் பசுமாட்டின் பாலை விற்றால் உனக்கு ஒன்றும் தேறாது. நஷ்டம் தான் வரும்." என பயமுறுத்தினார்கள். பால் விற்றால் தானே நஷ்டம்.! பசுமாட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் லாபம் தானே.! என்றில்லாமல் என்னுடைய மன நிம்மதிக்காக குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு இந்தப் பண்ணையைத் துவக்கினேன். இதிலிருந்து தான் விபூதி தயாரித்து சந்தைப்படுத்தினேன். மிகுந்த லாபம் எனக்கு.!" என்றவரிடம் விபூதி சேலஞ்ச் பற்றிக் கூறியதும், "ஆரோக்கியமான விஷயம் இது.!" என்கிறார் அவர்.

எப்படி ஆரோக்கியமாகும்..?

பொதுவாக விபூதிக்கு நெற்றியிலுள்ள நீரை, வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உண்டு. இதனால் தலையிலுள்ள நீர் முற்றிலும் இழுக்கப்பட்டு தலைவலி, சளி ஏற்படாது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது' - அதிமுக முன்னாள் நிர்வாகி பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'It is disgusting to see'-Trisha condemns the speech of ADMK ex-executive

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தனது கண்டனத்தை த்ரிஷா தெரிவித்திருந்தார். பின்னர் அது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.