நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விஎச்பி ரத யாத்திரை நாளை வருவதை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஎச்பி ரத யாத்திரை கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்திற்கு வருகிறது. இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ரத யாத்திரையை மறிக்கப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கூறிவருகின்றன.