Skip to main content

“இந்த தீர்ப்பு சாதிவெறியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்”- தேன்மொழி!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

This verdict will be a warning to caste fanatics

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுகூரைபேட்டை கிராமத்தில் நடைபெற்ற கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (25.09.2021) காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள சகஜானந்தா நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வரவேற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி தலைமையில் மாதர் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு இந்த வழக்கு குறித்து எடுத்துக்கூறி அதற்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பை வரவேற்று இனிப்புகளை வழங்கினர்.

 

பின்னர் இதுகுறித்து தேன்மொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கு, தமிழகத்தில் முதன்முதலில் பதியப்பட்ட சாதி ஆணவப்படுகொலை வழக்காகும். இந்த படுகொலை சம்பவம் காவல்துறைக்குத் தகவல் கிடைத்த பிறகும் கூட கண்ணகி முருகேசன் எரிந்து சாம்பலாகும் வரை விருத்தாச்சலம் காவல்துறை தடுப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக ஆரம்பத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யவும் மறுத்தது. இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தலித் அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு கடலூர் எஸ்.சி.எஸ்.டி வழக்குகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில்   விசாரணை நடைபெற்று வந்தது. இத்தீர்ப்பு 18 ஆண்டுகளுக்குப்பின்  காலதாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். இத்தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு வரவேற்கிறது.  

 

தமிழகத்தில் சாதிய ஆணவப்படுகொலை செய்யும் சாதி வெறியர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இதுபோன்ற சாதிய ஆணவ படுகொலை வழக்குகளில் காலதாமதம் இல்லாமல் குறுகிய காலத்திற்குள் தீர்ப்பு  வழங்க வேண்டும். மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும். சாதி ஆணவப்படுகொலையை தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களைப் பாதுகாப்பதற்கு  மாவட்டங்கள் தோறும்  சிறப்பு பாதுகாப்புப் பிரிவுகள் உருவாக்க வேண்டும். தமிழக அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகின்றது என்றும் சட்டப்போராட்டத்தை 18 ஆண்டுகள் நடத்திய வழக்கறிஞர் ரத்தினத்திற்கு வாழ்த்துக்கள்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாதி மறுப்பு திருமணம்; 16 வயது சிறுமி கொடூர கொலை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Tragedy of 16-year-old sister for attempted incident

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (24). இவருக்கு, 10ஆம் வகுப்பு படிக்கும் ஹாசினி்(16) என்ற தங்கை இருந்தார். இந்த நிலையில், சுபாஷும் சத்தியமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த மஞ்சுவும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மஞ்சுவின் பெற்றோர், இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2023ஆம் ஆண்டு மஞ்சுவும், சுபாஷும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையே, இவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா ஆகியோர், சுபாஷின் குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (06-03-24) சுபாஷ், தனது தங்கையை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மஞ்சுவின் தந்தை சந்திரன், வேன் ஒன்றை ஓட்டி வந்து, அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளார். அதன் பின்னர், வேனை அங்கே நிறுத்திவிட்டு சந்திரன் தனது மனைவியை அழைத்து தலைமறைவானார். இந்த பயங்கர விபத்தில், சுபாஷ் மற்றும் ஹாசினி பலத்த காயமடைந்தனர். 

Tragedy of 16-year-old sister for attempted incident

இந்த கொடூர சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள், அவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சுபாஷ் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தங்கை ஹாசினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில், விரைந்து வந்த ஈரோடு மாவட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சந்திரன் மற்றும் சித்ராவை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஊட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், அங்கு விரைந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளை திருமணம் செய்த மருமகனை கொலை செய்யும் முயற்சியில், மருமகனின் தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தமிழகத்தில் சாதிய வன்முறை அதிகரித்திருக்கிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Tamilisai Soundararajan says Caste incident has increased in Tamil Nadu

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று (10-11-23) தூத்துக்குடிக்கு வந்திருந்தார். அதன்பின் அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

அப்போது அவர், “சாதனை படைத்துக் கொண்டிருக்கும் தென் தமிழகம் இன்று சாதி பிரச்சனையால் கொடூரமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் தச்சநல்லூரில் 2 இளைஞர்களை சாதியை சுட்டிக் காண்பித்து சிறுநீர் கழிக்கப்பட்டது என்பது மிக வேதனையாக உள்ளது. ஆகவே, தமிழகத்தில் சாதிய வன்முறை அதிகரித்திருக்கிறது என்பதை சொல்ல வேண்டியுள்ளது. நாங்குநேரி விவகாரம், வேங்கைவயல் விவகாரம் என தொடர்ந்து இதுபோல் நடப்பது கவலையளிக்கக்கூடிய ஒன்று.

 

அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், நீட் தேர்வு தான் தலையாய பிரச்சனை என்று அதில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள். இது தவறு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் பிரச்சனை உள்ளதென்றால் சட்ட ரீதியாக அணுகலாம்” என்று பேசினார்.