வேங்கைவயல் விவகாரம்; 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை!

vengaivayal affair Voice sample test for 3 people

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட இருவரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு இன்று (08.05.2024) குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இரு பெண்கள் உட்பட 3 பேருக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடவியல் அறிவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனை நடைபெற உள்ளது.

Chennai pudukkottai vengaivayal voice
இதையும் படியுங்கள்
Subscribe