Skip to main content

கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வந்த சுற்றுலா சோகத்தில் முடிந்தது

Published on 27/02/2019 | Edited on 27/02/2019


வேலூர் மாவட்டம் ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலைக்கு, சென்னை போரூர் பகுதியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர்கள் பிப்ரவரி 26 ந்தேதி காலை சுற்றுலா  வந்தனர். 

k

 

மதியம் சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் வாணியம்பாடி அருகே கலந்தரா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த சிவா, ஜானகிராமன், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது, ஒவ்வொருவரும் ஒரு உதவி செய்தனர், பலர் வேடிக்கை பார்த்தனர்.

 

d

 

அப்போது வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசு விழாவில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அதிகாரிகள் அவ்வழியாக காரில் சென்றனர். மக்கள் கூட்டம் பதட்டமாக இருப்பதை பார்த்து காரை நிருத்தி விசாரித்தனர். விபத்து நடந்து இருப்பது அறிந்து உடனடியாக காரில் இருந்து இறங்கி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.