![e](http://image.nakkheeran.in/cdn/farfuture/ynh1k-xNC2n0i0aOGBPRHWHG_lKmGGZq_QgFMvufsdA/1543752380/sites/default/files/inline-images/enthiran%2010.jpg)
சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கர சாலையில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் டெக்னிஷியன் விபத்தில் சிக்கி புத்திசாலித்தனமாக மீண்டுள்ளார்.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அவர் தனது குடும்பத்துடன் டிசம்பர் 1ந்தேதி இரவு காரில் பெங்களூர் சென்று கொண்டிருந்தார். அவர்கள் வந்த கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் என்ற இடத்தில் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது.
![e14](http://image.nakkheeran.in/cdn/farfuture/WNdzbosRi6k1s1RhMYmq5VKHWCbNn7bvprL3fx3b9_Q/1543752420/sites/default/files/inline-images/enthiran%2014.jpg)
இரவு நேரம் என்பதால் யாரும் இதனை கவனிக்கவில்லை, பின்னால் வந்த வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுக்கொண்டுயிருந்தன. கார் கிணற்றில் விழுந்தது. காருக்குள் காயத்தோடு இருந்த சுந்தரமூர்த்தி தனது பாக்கெட்டில் இருந்த செல்போன் மூலமாக 108 ஆம்புலன்சை தொடர்புகொண்டு நடந்ததை கூறியுள்ளார்
.
உடனே ஆம்பூரில் இருந்து அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடம் தெரியாமல் தேடியுள்ளனர். உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த ரோந்து போலீசார் மற்றும் ஆம்பூர் தாலுக்கா காவல்நிலைய போலீசார் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த காரை தேடத்துவங்கினர்.
![e](http://image.nakkheeran.in/cdn/farfuture/EsDLjhkh4Cu5gLDeuhL0xK2Emrlmlt9dfqJ98_RkguQ/1543752484/sites/default/files/inline-images/enthiran%2015.jpg)
விடியற்காலை நேரத்தில் தங்களது ஊரில் போலிஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் இருப்பதை பார்த்து கிராம இளைஞர்கள் அந்த பகுதியில் திரண்டு விசாரித்துவிட்டு அவர்கள் சாலையோரம் உள்ள கிணற்றை தேடத்துவங்கினர். மின் விளக்கு இல்லாத இடத்தில் இருந்த அக்கிணற்றை கிராம மக்கள் உதவியுடன் கண்டுபிடித்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் காவலர் சரவணன் ரோந்து போலீஸ் உதவி ஆய்வாளர் ரகுபதி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு கிணற்றில் இருந்த அவர்களை பத்திரமாக மீட்டனர்.
![e](http://image.nakkheeran.in/cdn/farfuture/HrQLjzNotd-Bb6cmgTL3ABfw3icaotb2euM_Nd5I8mk/1543752590/sites/default/files/inline-images/enthiran%2012.jpg)
கிணற்றில் காரோடு உயிருக்கு போராடியதோடு, சமயோஜிதமாக 108க்கு போன் செய்தவர் நடிகர் ரஜினி நடித்து தற்போது வெளியாகி ஓடிக்கொண்டுள்ள 2.O படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த சுந்தரமூர்த்தி என விசாரணையில் தெரியவந்தது. காரில் அவரது மனைவி மாயா அவரது குழந்தை கிரித்திஷ் ஆகியோரை பத்திரமாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் மின்னூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.