Published on 11/03/2019 | Edited on 11/03/2019
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/Cts0nfyBvQq5B0Dhfn9CutUeJzScnT0FfqXKV3EbH8w/1552305134/sites/default/files/inline-images/vel2.jpg)
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது சம்பந்தமாக விவாதிக்கபட்டது.
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/McAfTFgH_GVeP8sBnCJJdZRGA43skzKqrrNVGQrn0C8/1552305218/sites/default/files/inline-images/vel3.jpg)
இந்த பொதுக்குழுவில் மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் தமிழ வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கலந்து கொள்ளவில்லை என்றாலும், மாநில நிர்வாக குழு உறுப்பினர் தி.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/NCnQEbFRgoOHvgDxkq7CBYYewKWJBhRsXveV_gDXcs0/1552305238/sites/default/files/inline-images/vel_3.jpg)
கூட்டத்தின்போது தொலைபேசி மூலமாக பேசிய வேல்முருகன், "பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி"யிடபோவதாக அறிவித்தார்.