Skip to main content

மோடிக்கு உடந்தையாக ஐந்தாம்படை-அடியாட்படை வேலையைச் செய்கிறது ஈபிஎஸ்-ஓபிஎஸ் பெயரிலான அரசு! வேல்முருகன் கண்டனம்

Published on 11/04/2018 | Edited on 11/04/2018


 

velmurugan


மோடிக்கு உடந்தையாக ஐந்தாம்படை-அடியாட்படை வேலையைச் செய்கிறது ஈபிஎஸ்-ஓபிஎஸ் பெயரிலான அரசு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழக வரலாற்றில் என்றுமே இல்லாத ஓர் ஐந்தாம்படை மற்றும் அடியாட்படை அரசாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் பெயரிலான அரசு!
 

இதன் முழு கட்டுப்பாடும் ஆளுநரின் கையில்; அதனாலேயே இங்கு ஆபாச களியாட்ட ஐபிஎல் போட்டி, அந்த ஆபாச ஐபிஎல் வியாபாரி சொடுக்கடித்ததுமே துணை ராணுவம் வருகை, பல்கலைக்கழக துணைவேந்தராக வெளிமாநில ஆர்எஸ்எஸ் மேல்சாதியர் நியமனம், தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம் கலந்துகொள்ளாமை என இத்யாதிகள்!
 

இதனை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, "ஆளுநரே தமிழகத்தை விட்டுப் போ; மோடி அரசே தமிழக ஆளுநரை திரும்பப்பெறு; தமிழக அரசே ஆளுநரின் துணைவேந்தர் நியமனங்களை ரத்து செய்” என வலியுறுத்துகிறது.

 

ops eps


 

இதில் நடவடிக்கை எடுக்க, அனைத்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து செயலில் இறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்க மத்திய பாஜக மோடி அரசு, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் மூன்றும் இணைந்து சதித் ”திட்டம் (Scheme)” தீட்டிச் செயல்படுகின்றன.
 

இதில், பொருளியல் குற்றப் பின்னணி உடைய ஈபிஎஸ்-ஓபிஎஸ் அமைச்சரவை தன்னை தற்காத்துக்கொள்ள மோடிக்கு உடந்தையாக ஐந்தாம்படை-அடியாட்படை வேலையைச் செய்கிறது.
 

அதன் விளைவுதான் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆபாச களியாட்ட ஐபிஎல் போட்டி!
 

அதற்குப் பாதுகாப்பாக 5,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர குவிப்பு!
 

மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அதைத் தள்ளி வை என்று சொன்னவர்கள் மீது தடியடி!
 

இவை மட்டுமல்ல; சொடுக்கடித்துக் கூப்பிட்டே துணை ராணுவத்தை வரவழைக்கிறார் அந்த ஆபாச ஐபிஎல் வியாபாரி.
 

ராணுவம் வரவேண்டுமென்றால், மிகவும் நெருக்கடியான நிலையில் மாநில அரசு கோர வேண்டும்; தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன உறுப்பு அமைப்புகள் தவிர்க்க முடியாத சூழல்களில் கோர வேண்டும்; இல்லையென்றால் ரொம்பவும் மோசமான நெருக்கடிகளை சமாளிக்க மத்திய அரசே அனுப்ப வேண்டும்.
 

ஆனால் இதில் எந்தக் காரணங்களும் சூழல்களும் இல்லாமலே ஒரு தனியார் ஆபாச ஐபிஎல் வியாபாரி சொடுக்கடித்துக் கூப்பிட்டே துணை ராணுவத்தை வரவழைக்கிறார் என்றால் இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
 

இத்தகைய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நிகழ்கின்றன என்றால், அது தமிழக வரலாற்றில் என்றுமே இல்லாத ஓர் ஐந்தாம்படை மற்றும் அடியாட்படை அரசாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் பெயரிலான அரசு இருப்பதாலும், அதன் முழு கட்டுப்பாடும் ஆளுநரின் கையில் இருப்பதாலும்தான் அல்லவா?

 

Narendra-Modi 600.jpg


 

அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக இங்கு ஆபாச களியாட்ட ஐபிஎல் போட்டி!
 

அந்த ஆபாச ஐபிஎல் வியாபாரி சொடுக்கடித்ததுமே துணை ராணுவம் வருகை!
 

பல்கலைக்கழக துணைவேந்தராக வெளிமாநில ஆர்எஸ்எஸ் மேல்சாதியர் நியமனம்!
 

தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்து தமிழகம் அதில் கலந்துகொள்ளாமை என இத்யாதிகள்!
 

இதனை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, "ஆளுநரே தமிழகத்தை விட்டுப் போ! மோடி அரசே தமிழக ஆளுநரைத் திரும்பப்பெறு! தமிழக அரசே ஆளுநரின் துணைவேந்தர் நியமனங்களை ரத்து செய்!” என வலியுறுத்துகிறது.
 

இதில் நடவடிக்கை எடுக்க அனைத்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து செயலில் இறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.