கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் அனைத்தும் ஏழை வன்னியர்களின் முயற்சியால் சேர்க்கப்பட்டவை.வன்னியர் சங்கத்தை தாம்தான் உருவாக்கியது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளார் ராமதாஸ். தன்னை கொல்ல திட்டம் தீட்டியதாக ராமதாஸ்மீது அமைச்சர் சிவி.சண்முகம் புகார் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு உழைத்த தலைவர்கள் பலர் குறித்த தகவல்கள் ராமதாஸால்மறைக்கப்பட்டுள்ளது.
வன்னிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி அதனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியவர் ராமதாஸ். உண்மை என்ன என்பது பற்றி விவாதிக்க நான் தயார் அன்புமணி தயாரா? . ஏழை வன்னியர்கள் கொடுத்த அண்டா,குண்டா மூலமே வன்னியர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஒன்றரை ஏக்கர் நிலம் மட்டும் வைத்திருந்த ராமதாஸுக்கு இப்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் உள்ளது. முதல்வராக கலைஞர் இருந்தபோதுதான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது.
வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் குறித்தும் மக்கள் தொலைக்காட்சி பற்றியும்ராமதாஸ் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக்கூறினார்.