Skip to main content

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ... பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்து ஒன்று, திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த பேருந்து வாணியம்பாடி நகர பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் நெருங்கி வந்த போது பேருந்து நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை, அதே இடத்தில் நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். 
 

பேருந்து ஏன் திடீரென நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிப்போனார் என பயணிகள் முழிக்கும்போது பேருந்தின் அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பி பேருந்துக்குள் பரவியுள்ளது. பேருந்து தீ பிடித்தது என்று தெரிந்து பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு கீழே இறங்கினர். இதனை பார்த்த  அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீ அணைக்கும்  உபகரணங்களை விரைந்து எடுத்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

VELLORE VANIYAMBADI PRIVATE BUS INCIDENT PEOPLES SHOCKED


பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கே வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும் தீயணைப்பு துறையினர் காலதாமதமாக வந்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

மோட்டார் வாகன சட்டத்தின்படி ஒவ்வொரு பேருந்துகளிலும் தீ அணைப்பு உபகரங்கள் கட்டாயம் வைக்க வேண்டும். ஆனால் விபத்து நடந்த பேருந்தில் இது போன்று உபகரணங்கள் ஏதும் இல்லை. இந்த பேருந்தை ஆய்வு செய்த வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என தெரிந்தது.

இனிமேலாவது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பேருந்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வாகனங்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.