Skip to main content

பாலாறு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்- பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை. 

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

வாணியம்பாடியில் வேலூர் வடமேற்கு மாவட்டம் பாமக பொதுக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்துக் கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஜி.கே.மணி, தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகள் தெரவித்துக் கொள்கின்றோம். இந்திய அளவில் கடந்த சில மாதங்களாக தொழில் வேகமாக நலிவடைந்து வருகிறது. தொழில் முனைவோர்கள்  பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளனர். ஆகவே மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனித்து சிறு, குறு நடுத்தர தொழில்கள் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அதை ஊக்கப்படுத்துவதற்கு மானியம் வழங்க வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும். 

vellore vaniyambadi pmk jk mani meet palar river


தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகவும், அரசின் நலத்திட்டங்களை வேகமாக மக்களுக்கு சென்றடையும் வகையிலும், வேலூர் மாவட்டத்தை பிரித்தது போன்று பெரிய மாவட்டங்களான சேலம், மதுரை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களை பிரிக்க வேண்டும். 
 

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு ஆங்காங்கே தடுப்பணை கட்டி உள்ளதால் நீர் வரத்து குறைந்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாறு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.