ADVERTISEMENT

அதிமுக பிரமுகரிடம் சிக்கிய 26 லட்சம் வாக்காளர்களுக்கு தருவதற்காக வைத்திருந்த பணமா?

09:29 PM Apr 13, 2019 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கொரட்டி கிராமத்தில் உள்ள அதிமுக நிர்வாகியும், பைனான்ஸ் தொழில் செய்யும் கண்ணன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் வீட்டில் இருந்து ரூபாய் 26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த பணத்துக்கு கணக்கு கேட்ட அதிகாரிகளிடம் கணக்கு தரவில்லை கண்ணன். இதனால் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு அழைக்கும்போது வரச்சொல்லி சென்றனர்.

அந்த பணம் திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வாக்காளர்களுக்கு தருவதற்காக வைத்திருந்த பணம் எனக்கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தியுள்ளது வருமான வரித்துறை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT