Advertisment

தர்பார் திரைப்படம் வெற்றிபெற அன்னதானம் செய்த செ.கு.தமிழரசன்

நடிகர் ரஜினியின் தர்பார் திரைப்படம், ஜனவரி 9ந் தேதி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டுள்ளது. இந்த திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் மட்டுமே உள்ளது. பொதுமக்கள் கொண்டாடும் வகையில் இல்லை என்கிற விமர்சனம் திரை விமர்சகர்கள் வைத்து வருகின்றனர்.

Advertisment

vellore rajini fans club

இந்நிலையில் தர்பார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் அக்பர்பாஷா, நான்காவது மண்டல செயலாளர் ரஜினி ராஜ்குமார் இருவரின் ஏற்பாட்டில், அன்னதானம் செய்தனர்.

இந்த அன்னதான நிகழ்வுக்கு ரஜினியின் தற்போதை அரசியல் என்பர் பட்டியலில் இணைந்துள்ள இந்திய குடியரசு கட்சியின் தமிழக தலைவர் செ.கு.தமிழரசன் அன்னதானத்தை தொடங்கிவைத்தார்.

Advertisment

vellore rajini fans club

வேலூர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்வில் ரஜினியை இந்தியாவின் இளைய மகாத்மா என்கிற பெயர் சூட்டி தர்பார் திரைப்படம் குறித்து பேசினர்கள். 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

darbar rajini makkal mandram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe