ADVERTISEMENT

வேலூரில் தேர்தல் ரத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

10:14 AM Apr 17, 2019 | kalaimohan

வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரம் குடியாத்தம், ஆம்பூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏ.சி சண்முகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தின் முறையீடு அவசர வழக்காக இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT