Skip to main content

பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டி... நக்கீரன் ஆசிரியரின் வேண்டுதலை ஏற்று உதவிய எம்.எல்,ஏ...!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

வேலூர் மாவட்டம் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி(65). இவரது கணவர் சந்திரன். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவரும் புவனேஷ்வரியை விட்டு சென்றுவிட்டார். இதனால் அவர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலைக் குறைவு இருப்பதால், இவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அரசின் நிதி உதவி ரூ. 1000த்தை மட்டும் பெற்று வாழ்கை நடத்தி வந்துள்ளார்.

 

vellore-old-lady-demonetized-note-issue

 



இதற்கிடையில் கடந்த ஆறு மாதமாக அரசின் நிதி உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. பின்னர் தனது சேமிப்பு பணத்தில் இருந்து எடுத்து வீட்டு வாடகையை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வீட்டின் உரிமையாளர் பணம் செல்லாது என்று சொன்னவுடன் புவனேஷ்வரி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து ஜனவரி 12ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு இது குறித்து மனு அளித்தார். அந்த மனுவில், " தன்னுடைய சேமிப்பு பணம் ரூ.12,000 பழைய 500 ரூபாய் நோட்டுக்களாக உள்ளது. எனக்கு எழுத படிக்க தெரியாது. நான் படுத்த படுக்கையாக இருப்பதால் என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் நான் சேமித்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்கிக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

 



அந்த மனுவை வாங்காத அதிகாரிகள், அந்த மனுவில் உள்ள செய்தியை மட்டும் படித்துவிட்டு வங்கி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். வாங்கி அலுவலர்கள் பழையே ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு காலக்கெடு முடிந்து விட்டதால், அவற்றை மாற்ற முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் புவனேஷ்வரியை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் மனமுடைந்த மூதாட்டி, கையில் பணமும் இல்லை. அரசின் உதவித்தொகை வேறு நின்றுவிட்டது. கையில் உள்ள பணமும் பழைய ரூபாய் நோட்டுக்களாகவே உள்ளன என கூறிக்கொண்டு கண்ணீர் வடித்த படியே வீடுதிரும்பினார். 

இந்த செய்தியை அறிந்த நக்கீரன் ஆசிரியர், பாதிக்கப்பட்ட புவனேஷ்வரிக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததோடு உடனடியாக, வேலூர் திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவுமான நந்தகுமாரிடம் இது குறித்து பேசியுள்ளார். இதையடுத்து நந்தகுமார் அந்த மூதாட்டியை வரவழைத்து, பழைய 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபாரிசு செய்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.