Skip to main content

செயற்கை மணல் கொள்ளையர்கள் - காப்பாற்றும் அதிமுக அமைச்சர்

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

 

பாலாற்றை சுரண்டி ஒருப்பக்கம் மணல் கொள்ளை நடத்துகிறார்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிமுகவினர். இதனை தடுக்க வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, கணிமவளத்துறை கண்டும் காணாமல் கண் மூடிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் பாலாற்றில் உள்ள குவாரிகள் மூடப்பட்டதால் ஆற்றின் ஓரம் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஆழமாக தோண்டி மணலை எடுத்து அதை நீர்விட்டு கழுவி மணலாக்கி விற்பனை செய்கின்றனர். இதுப்பற்றி புகார் தந்தாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

v

 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் காக்கங்கரை என்கிற கிராம பகுதியில் செயற்கை மணல் உற்பத்தி நிலையங்கள் சட்டவிதிகளுக்கு முறையாக பலவும் செயல்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதுப்பற்றி அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் தந்தும் சில சமயம் நடவடிக்கை எடுப்பது, பல சமயம் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனர். அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருக்க நன்றாக கவனித்துவிடுகின்றனர்.

 

v

 

இந்நிலையில் பிப்ரவரி 23ந்தேதி காலை கந்திலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செயற்கை மணல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீசார், 5 மணல் லாரி டிப்பர்கள் மற்றும் அதன் ஓட்டுநர்களை மணலுடன் பிடித்து கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யச்சொல்லினர். அவர்களும் சரியென கூறியுள்ளனர். மதியம் 1 மணியளவில் ஓட்டுநர்கள் 5 பேரையும் காவல்நிலையத்தை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர் கந்திலி போலிஸார். டிப்பர் லாரிகள் மட்டும் கிக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

v

இதைக்கேட்டு அதிர்ச்சியான சமூக ஆர்வலர்கள் நம்மிடம், மணல் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக திருப்பத்தூர் தொகுதி முன்னால் எம்.எல்.ஏ ரமேஷ் ஆதரவாக உள்ளார். 5 டிப்பர் லாரிகள் மற்றும் டிரைவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் உடனடியாக அவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் வீரமணியிடம் இதுப்பற்றி கூறியுள்ளார். அவர் உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு சத்தம் போட இதனால் 5 ஓட்டுநர்களை விடுவித்தவர்கள், 3 டிப்பர் லாரிகளையும் விடுவித்துள்ளனர். இரண்டு டிப்பர் தான் சிக்கியுள்ளதாக தற்போது தகவல் தெரிவிக்கின்றனர் என்கின்றனர். டிப்பர் லாரிகள் காவல்நிலையத்துக்கு வந்தது, கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ போன்றவை இருக்கும்போதே போலிஸார், அதிகாரத்தில் உள்ளவர்களின் பேச்சை கேட்டு விடுவிக்கின்றனர் என அதிருப்தி தெரிவித்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்