கணக்கில் வராத 10 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!

வேலூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கணக்கில் வராத பண நடமாட்டத்தை தொகுதியில் கட்டுப்படுத்த வாகனங்களில் செல்பவர்களை மடக்கி சோதனை செய்து வருகிறது தேர்தல் பறக்கும் படை. வேலூர் மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளன.

vellore lok sabha Elections Flying Force Officers seizure rs 10 lakhs

இந்நிலையில், ஜூலை 16 ஆம் தேதி மாலை, வேலூர் நேஷனல் தியேட்டர் அருகே காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் ராஜ் என்பவர், காரில் கொண்டு சென்ற ரூபாய் 10 லட்சம் ரூபாய் வேலூர் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய பணம் வேலூர் தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இது தொடர்பாக தேர்தல் வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

election commission of india election flying force officers seizure 10 lakhs vellore lok sabha election
இதையும் படியுங்கள்
Subscribe