Skip to main content

வேட்புமனு பரிசீலனை- ஏ.சி.சண்முகத்தின் திட்டத்தை உடைத்த திமுக.

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான மனுதாக்கல் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 18 ஆம் தேதி வரையிலான 7 நாட்கள் மனுதாக்கல் நடைபெற்றது. ஜூலை 18 ஆம் தேதி மதியம் 3 மணியோடு மனுதாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்தது. திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனுதாக்கல் செய்துயிருந்தனர். இந்த தேர்தலில் தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது. பிரதான கட்சிகள் எனப்பார்த்தால் திமுக, அதிமுக சின்னத்தில் ஏ.சி.சண்முகம் மட்டுமே போட்டியிடுகின்றனர். 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுயிருந்தது.

 


50 மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக தரப்பினர் திரளாக கலந்துக்கொண்டுயிருந்தனர். ஏ.சி.சண்முகம் மனுவை பரிசீலனை செய்த போது, புதிய நீதிக்கட்சி என்கிற தனியான கட்சியின் தலைவர் எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என கேள்வி எழுப்பினர் திமுக வேட்பாளர் உட்பட சில சுயேட்சை வேட்பாளர்கள். அதிமுக கட்சி தலைமையின் ஒப்புதல் கடிதத்துடன் தான் போட்டியிடுகிறார் எனச்சொல்ல, அப்போ அதற்கான கடிதம் எங்கே, இவர் புதிய நீதிக்கட்சியில் இருந்து விலகியதற்கான கடிதம் எங்கே என கேள்வி எழுப்பினர். இதனால் இவரது வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.

 

 

vellore lom sabha election dmk and admk

 


திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மனுவை பரிசீலனைக்கு எடுத்த போது, ஏ.சி.சண்முகத்தின் சார்பில் வந்தவர்கள், தேர்தலில் பணம் தந்தார் என்கிற குற்றச்சாட்டு உள்ளவர் எப்படி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார் என கேள்வியை எழுப்பினர். இதே கேள்வியை சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் எழுப்பினார். இருதரப்பும் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரத்திடம் முறையிட்டனர். இறுதியில் ஒரு வழியாக சில சட்ட விதிகளை காட்டி இருவரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட 36 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

 


இதில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ள ஏ.சி.சண்முகம் மற்றும் மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெற்ற பின் இதன் எண்ணிக்கை இன்னும் குறையும். மனுக்களை திரும்ப பெற ஜூலை 22 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.சி.சண்முகம் தரப்பில், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்ய வைக்க நினைத்தார் இதனை அறிந்தே ஏ.சி.சண்முகம் மனுவை தள்ளுபடி செய்ய வைக்க நாங்கள் எதிராட்டம் ஆடினோம். இதனை அவர் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் திமுக தரப்பில். திமுகவின் எதிர்ப்பு சண்முகம் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.

vellore lom sabha election dmk and admk

 


இந்த குழுவை பார்த்து அதிமுக தரப்பில் எப்படியாவது இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்கிற வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் தான் பிரமாண்ட குழு அமைத்துள்ளது என்கிறார்கள். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்தனர், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாகினர். அந்த தோல்வி பயத்தால் அந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் பொறுப்பாளர்களாக இரண்டு முக்கிய தலைவர்களை நியமித்துள்ளார்கள் என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.