Skip to main content

ஆங்கிலம் கற்பது சுலபமான ஒன்று...வி ஐ டி சேகர் விசுவநாதன் பேச்சு!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகளவில் மதிப்பெண் பெற்று சாதிக்கும் ஏழை மாணவர்களுக்கு வேலூர் வி ஐ டியில் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இலவசமாக உயர்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி இந்தாண்டும் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இடம் பெற்ற மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி வி ஐ டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வி ஐ டி துணைத்தலைவர் டாக்டர். சேகர் விசுவநாதன் பேசும் போது, தமிழ் வழி கல்வியில் பயின்ற நீங்கள் ஆங்கிலத்தை கண்டு பயப்படவோ, அச்சப்படவோ வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பேசமுயற்சி செய்தால் போதும், விரைவில் ஆங்கிலத்தில் பேசலாம். ஆரம்பத்தில் ஆங்கிலம்  பேசும் போது தவறு நடப்பது இயற்கை தான். ஆங்கிலம் தப்பாக பேசி விட்டோமோ என்று ஆங்கிலம் பேசும்  முயற்சியை மாணவர்களாகிய நீங்கள் கை விடக்கூடாது. 

 

 


வி ஐ டி வேந்தர் டாக்டர். ஜி.விசுவநாதன் தமிழ் வழிக்கல்வி தான் பயின்றார். ஆனால் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற உந்துதல் இருந்த காரணத்தால் ஆங்கிலம் பேசும் திறமையை சீக்கிரமாக வளர்த்து கொண்டார். தினமும் ஆங்கிலம் நாளிதழ் படிப்பது, அர்த்தம் புரியாத வார்த்தைக்கு அகராதி மூலம் அர்த்தத்தை தெரிந்து கொண்டார். அதே போல் மாணவர்களாகிய நீங்கள் தங்கள் ஆங்கில புலமையை வளர்த்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தாய் மொழி மீது பற்றோடு இருக்க வேண்டும் என்றார். மாணவ, மாணவிகள் ஆங்கிலம் பேசுவதற்கு வி ஐ டியில் சிறப்பு பயிற்சிஅளிக்கப்படுகிறது எனக் கூறினார்.
 

 

 

VELLORE INSTITUTE OF TECHNOLOGY STARS FREE EDUCATION CEREMONY

 

 

 

வி ஐ டி நிர்வாக இயக்குனர்  சந்தியா பேசுகையில் +2 வரை மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்திருப்பீர்கள் இனி மேல் நீங்கள் இஷ்டப்பட்டு படிக்க வேண்டும் . மாணவ, மாணவிகளுக்கு நேரம் தவறாமை மிக முக்கியம். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் முழு கவனத்தோடு ஈடுபடவேண்டும். ஆங்கிலம் பேச முயற்சி செய்தால் எளிதில் ஆங்கிலத்தை கற்று கொள்ளலாம் என்றார். வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மாணவ, மாணவிகளை பாராட்டி பேசுகையில் வி ஐ டி வழங்கி இருக்கும் இந்த வாய்ப்பை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். ஆங்கில பய உணர்வை போக்கி மாணவர்கள் சீக்கிரமாக ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும் என்றார்.

 

 

 

வி ஐ டி முன்னாள் மாணவரும், டெல் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் இளவரசன் கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகையில் இங்குள்ள மாணவர்கள்அனைவரும் நட்சத்திர மாணவர்கள் தான். நான் வி ஐ டியில் படிக்கும் இந்தளவுக்கு வசதி கிடையாது. தற்போது மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு வசதிகள் உள்ளது. மாணவ, மாணவிகள் ஏற்கனவே பல பாடங்களை படித்து விட்டு தான் இங்கு வந்துள்ளீர்கள். அதனால் ஆங்கிலம் உங்களுக்கு கடினமாக இருக்காது. முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.