Skip to main content

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த நூலகர்... காப்பற்ற முயன்ற பெண் போலீஸ்... போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்...!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரத்தில் உள்ள தொரப்பாடி பகுதியில் இயங்கிவருகிறது ஈவேரா அரசு பாலிடெக்னிக் கல்லூரி. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டைச் சார்ந்த மூன்று மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை தந்துள்ளனர்.

 

Vellore  incident - police investigation

 



அதில் தங்களது கல்லூரியில் பணியாற்றும் நூலகர் தாமோதரன் பாலியல் ரீதியாக தங்களுக்கு தொல்லை தருகிறார். யாரும் இல்லாத நேரத்தில் நூலகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என வரச்சொல்லி, பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என புகார் எழுதி தந்துள்ளனர். இந்தப் புகாரை மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் காவலர்கள் விசாரணை நடத்தாமலேயே மாணவிகளை இது எல்லாம் ஒரு புகாரா எனச் சொல்லி அனுப்பி வைத்து விட்டனர்.

அதனைத்தொடர்ந்து அந்த மாணவிகள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அலுவலகத்துக்குச் சென்று அங்கும் இதே மனுவை தந்துள்ளனர். அந்த மனு வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதையடுத்து மாணவிகளை அழைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், மேலிடத்தில் புகார் கொடுத்ததற்காக மிரட்டியுள்ளனர். இதனால் அந்த மாணவிகள் அழுதபடியே காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்துள்ளனர். இதனை தங்களது சக மாணவ மாணவிகளிடம், பாதிக்கப்பட்ட  மாணவிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி மார்ச் 17ந்தேதி காலை மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். 500 க்கும் அதிகமான மாணவர்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். கரானா வைரஸ்  பரவலால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த சமயத்திலும் மாணவர்கள் திரண்டு வந்திருந்தது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமூக நலத்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர், காவல்துறையினர் என குழுவாக வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி நூலகர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என மாணவர்கள் கூறினர். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை அதிகாரிகள் உறுதிமொழி வழங்கினார். அதன்பின் சமூக நலத்துறை அதிகாரிகள் உடன் மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தந்தனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், தாமோதரனை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயர் கல்வித்துறை அலுவலகம் புகாருக்கு உள்ளான தாமோதரனை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.