வேலூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண். வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் வேலை பார்த்துவந்த ஒரு இளைஞரிடம் பழகியுள்ளார். பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஜனவரி 18ந் தேதி இரவு 9 மணியளவில் தன்னுடைய காதலனுடன் இந்த கோட்டை பகுதியின் ஒருயிடத்தில் உட்கார்ந்து காதலர்கள் ஜாலியாக, பேசிக்கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.
அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து காதலர்களை சூழ்ந்து நின்றுள்ளது. பிறகு அந்த பெண்ணை கோட்டைக்குள் மறைவான இடத்தில் வைத்து, கத்திமுனையில் மாறி மாறி சீரழித்ததாக கூறப்படுகிறது. கிளம்பி செல்லும்போது, அந்த இளம்பெண் கழுத்தில் போட்டிருந்த நகைகளையும் பறித்து கொண்டு 3 பேரும் தப்பிவிட்டனர் எனக்கூறப்படுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அந்த பெண்ணால் நடக்க முடியாமல் தடுமாற அழுத அந்த காதலன், ஆபத்தான நிலையில் தனது காதலியை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி வடக்கு காவல்நிலையத்தில் விசாரித்தால், பதில் சொல்ல மறுக்கின்றனர். டிசம்பர் 19ந்தேதி காலை வடக்கு காவல்நிலையத்துக்கு வந்த எஸ்.பி பிரவேஷ்குமார், இதுதொடர்பாக வேலூர் டி.எஸ்.பி, ஆய்வாளரிடம், தகவல்களை கேட்டுவிட்டு, அவர்களை பிடிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளம்பெண்ணை சீரழித்து தப்பியோடிய மூன்று பேரில் இருவரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர். வசந்தபுரத்தை சேர்ந்த அஜித், சக்தி என இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 18 வயது தான் ஆகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மூன்றாவது நபரான இளைஞர் அடாமணி என்பவன் தலைமறைவாகியுள்ளான், அவனை போலீஸார் தேடிவருவதாக கூறப்படுகிறது.
கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர்கள் இவர்கள் என்கிறது போலீஸ் தரப்பு. இவர்கள், இதுப்போல் பலரை மிரட்டி பணம், நகை பறித்துள்ளதாக முதல் கட்டமாக தெரியவந்துள்ளது என்கின்றனர்.