Skip to main content

நண்டு வளர்த்தால் நான்கு மடங்கு லாபம்... 4 கோடியை மோசடி செய்த கும்பல்!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம், நண்டு வளர்ப்பு தொழிலில் ஈடுப்பட்டால் நான்கு மடங்கு லாபம் கிடைக்கும் என ஒரு கும்பல் ஆசைவார்த்தை கூறியுள்ளது. இதனை நம்பி குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 450- க்கும் மேற்பட்ட படித்தவர்கள் பலர் முதலீடு செய்து ஏமாந்து நின்றுள்ளனர்.
 

இதுக்குறித்து வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரவேஷ்குமாரிடம் புகார் அளிக்க வந்தனர் ஏமாந்தவர்களில் ஒரு பகுதியினர். அதில் சந்திரா என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், நான் தலைமுடி வாங்கி விற்கும் ஏஜெண்ட். எனக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த ரேணுகாதேவி, ஜெய் என்பவர்கள் அறிமுகமானார்கள். இவர்களை எனது முகநூல் நண்பர் ஆதித்யா என்பவர் அறிமுகம் செய்துவைத்தார்.

vellore gudiyatham 4 crores police commissioner

ரேணுகாதேவியும், ஜெய்யும் சேர்ந்து நண்டு வளர்ப்பு தொழிலில் முதலீடு செய்தால் நான்கு மடங்கு லாபம் என்றனர். இதற்கான முதலீட்டு நிறுவனம் சென்னை வடபழனியில் லஷ்மணன் என்பவர் நடத்தி வருகிறார் எனச்சொல்லி அறிமுகப்படுத்தினார்கள். அவரை போய் சந்தித்தபோது, நண்டு வளர்க்கும் இடத்துக்கு அழைத்து சென்று இந்த தொழிலை நாங்கள் தான் செய்கிறோம் எனச்சொல்லி காட்டினார். முதலீடு செய்யும் பணத்தை மும்மடங்கு லாபத்தோடு வார வாரம் 30 வாரத்துக்கு வழங்கப்படும் என்றார்.


நான் முதலில் முதலீடு செய்தேன், அதன்பின் எனக்கு தெரிந்தவர்கள் என 108 பேரை சேர்த்து 1 கோடியே 11 லட்சம் ரூபாய் அவர்கள் சொன்ன வங்கி கணக்கிலும், பணமாக நேரில் 1 கோடியே 20 லட்ச ரூபாய் என மொத்தம் 2 கோடியே 31 லட்ச ரூபாய் வழங்கினேன். அதேபோல் நான் அறிமுகப்படுத்திய ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் என பலரும் முதலீடு செய்துள்ளனர். அதன்படி 375 பேர் செய்த முதலீடு 1 கோடியே 48 லட்ச ரூபாய் வசூலித்துள்ளார். இப்படி மொத்தம் 3 கோடியே 79 லட்ச ரூபாய் வாங்கியவர் வார வாரம் தருகிறேன் எனச்சொல்லி லாபத்தொகையை தரவில்லை.


அவரது சென்னை அலுவலகத்துக்கு சென்றபோது பூட்டியிருந்தது. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. பணம் முதலீடு செய்தவர்கள் எனக்கு நெருக்கடி தருகிறார்கள். அதனால் அந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு தந்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி அலுவலக அதிகாரிகள், விசாரணை நடத்தி பின்னர் நடவடிக்கை எடுக்கிறோம் எனச்சொல்லி அனுப்பியுள்ளனர்.  


அதீத லாபத்துக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்துவிட்டு ஏமாந்து நிற்பவர்களில் 90 சதவிதம் நன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.