Skip to main content

மருத்துவமனையில் சில்மிஷம்! இளைஞனை செருப்பால் அடித்த பெண்மணி!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
police investigation


வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அடுக்கம்பாறை என்கிற கிராமத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். தினமும் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏழை மக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.


நோயாளிகளுடன் வரும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகளை பார்க்க வரும், உடன் வரும் உறவினர்கள் எப்போதும் இருப்பர்.


வேலூரை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் நோயாளியாக உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க வந்துள்ளார். பார்வையாளர்கள் நேரம் இன்னும் தொடங்காததால், நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் வளாகத்தில் அமர்ந்துயிருந்துள்ளார். அப்போது, திடீரென அந்த பெண்மணி 30 வயது மதிக்கதக்க ஒரு இளைஞரின் சட்டையை பிடித்து, 'நாயே நீயெல்லாம், அக்கா, தங்கச்சியோட பொறக்கல. உங்க அம்மா வெளியில போனா இப்படி இன்னோருத்தன் செய்தால் உனக்கு எப்படியிருக்கும்' என திட்டியவர் தனது காலில் இருந்து செருப்பை கழட்டி அந்த இளைஞனை அடித்துள்ளார்.


இதனால் மருத்துவமனைக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் இதனை நின்று வேடிக்கை பார்த்தனர். அங்கிருந்தவர்கள் 'என்னம்மா ஆச்சி? எதுக்காக அடிக்கறீங்க? அந்த பையனை' என கேள்வி கேட்டதும், 'என் வயசு என்ன? அவன் வயசு என்ன? என்னை சீண்டறான்' என சொல்ல அதிர்ச்சியானவர்கள் அந்த இளைஞனை நான்கு அடி அடித்தனர்.


பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்துறையை சேர்ந்த காலர்களை அழைத்து அந்த இளைஞனை ஒப்படைத்தனர். அவனை அழைத்து சென்ற போலிஸார் அவனிடம் விசாரித்தபோது, தனது பெயர் பரசுராமன் என்றும், கம்மம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவன் என தகவல் கூறியுள்ளான். அதனை தொடர்ந்து அவனை போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.