Skip to main content

குப்பையை பிரித்து தந்ததால் தங்கம்... அசத்தும் வேலூர் இளைஞர்!

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

வேலூர் மாநகராட்சி 24 வது வார்டில் வசிக்கும் பொதுமக்களிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுயிருந்தார் வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநரான தினேஷ் சரவணன். அந்த அறிவிப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாக பிரித்து நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கவேண்டும். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து 30 நாட்களும் குப்பையை பிரித்து போடுபவர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். முப்பதாவது நாளில், ஒரு நாள் விடாமல் குப்பையை பிரித்து கொடுத்த அனைவரது பெயரையும் ஒரு துண்டு சீட்டில் எழுதி ஒரு குடுவையில் போடப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்களுக்கு தங்கமும், 4 நபர்களுக்கு வெள்ளியும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

அதன்படி கடந்த 45 நாட்களாக 24வது வார்டு மக்களை தொடர்ந்து கண்காணித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நபர்களில், இரண்டு பேருக்கு தங்கமும், 4 பேருக்கு வெள்ளி வழங்கும் நிகழ்வு மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா, மண்டலம் 2 சுகாதார அலுவலர் சிவக்குமார் போன்றோர் வெற்றி பெற்ற பெண்களுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி வழங்கினார்கள்.

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் +2 மாணவிகள் 250 பேருக்கு தேர்வு எழுத எழுது பொருட்கள் இலவசமாக ஆசிரியர்கள் மூலமாக வழங்கியுள்ளார். வயதான, ஏழ்மையான தனிமையில் வாழும் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் உட்பட உதவிகள் வழங்குவது, வீடு கட்ட பொருள் உதவி, கிராமப்புற பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து தருவது, தன்னம்பிக்கை வகுப்புகள் எடுப்பது என செயல்படுகிறார்.


இதுக்குறித்து 31 வயதான தினேஷ் சரவணனிடம் நாம் பேசியபோது, ''எனது அப்பா செல்வராஜ், பால் வியாபாரி. அம்மா தயிர் வியாபாரம் செய்து வந்தார். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. அதில் பெரிய அண்ணன் சரவணன், 8வது வரை மட்டும்மே படித்திருந்தார். குடும்ப தேவைக்காக அவரும் அப்பாவுடன் இணைந்து பால் வியாபாரம் செய்து மற்ற மூன்று பேரை படிக்க வைத்தார். அவர் பால் வியாபாரம் செய்ததோடு, எங்களை விட ஏழ்மையில் இருப்பவர்களுக்கும், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், படிக்கவைக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

 

 Gold prize for separating garbage ... Awesome youth in Vellore!

 

2014ல் அவரது 35வது வயதில் திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது அவரால் உதவி பெற்றவர்கள் பலர் வந்து அழுதபடி அவர் செய்த உதவிகளை நினைவு கூர்ந்தபோது கலங்கிவிட்டோம். அவர் இறப்புக்கு பின்பு அவரின் சமூக தொண்டு பாதியில் நின்றுவிட்டது. அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு தான் பி.இ முடித்துவிட்டு சென்னையில் வேலைக்கு சேர்ந்தியிருந்தேன். அண்ணன் செய்து வந்த உதவிகள் திடீரென்று நிற்பதை மனம் ஏற்கவில்லை. அதை ஏன் நாம் செய்யக்கூடாது என நினைத்து நான் இந்த சேவையில் இறங்கினேன். என்னுடைய சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அதிலிருந்து தான் இந்த உதவிகளை செய்கிறேன். இதற்காக வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாள் வேலூர் வந்துவிடுவேன். என்னால் முடிந்தளவு தேவை இருப்பவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன். இதையெல்லாம் நான் முகநூல், ட்விட்டர் போன்றவற்றில் பதிவிட்டு வந்தேன். அதனைப்பார்த்து தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி ட்விட்டரில் என்னை பாராட்டினார்.

 

சமூக வளைத்தளம் வழியாக நான் செய்யும் உதவிகளை பார்த்தவர்கள் சிலர், எங்களால் களத்தில் இறங்கி உதவ முடியாது, நீங்கள் எங்கள் சார்பாக உதவ முடியுமா எனக்கேட்டு தொடர்பு கொண்டார்கள். நான் உதவி செய்ய எந்த அமைப்பையும் வைத்திருக்கவில்லை, தனிப்பட்ட முறையில், சொந்தப்பணத்தில் இருந்துதான் உதவி செய்கிறேன். மற்றவர்களிடம் பணம் வாங்கி உதவினால் சரியாக இருக்குமா என யோசித்தேன். சிலரின் அன்பால் அவர்கள் தந்த நிதியை வாங்கி அவர்கள் சொல்வது போல் உதவுகிறேன். அதுக்குறித்த கணக்கை பிளாக் வழியாக வெளிப்படையாக தெரிவித்துவிடுகிறேன்'' என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.