Skip to main content

வேலூர் கோட்டையில் காதலர்களை விரட்டிய துப்பாக்கி ஏந்திய போலீசார்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 

அதேபோல் மாவட்டம் முழுவதும் 8 ந்தேதி வரை வரை பொதுக்கூட்டம் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. அத்துடன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் அதிகாரிகள்.

vellore castle lovers not allowed for yesterday police protection high


வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதற்காக கோட்டை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர், அங்குள்ள மசூதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டைக்குள் யார் சென்றாலும் நிறுத்தி அவர்களை விசாரித்த பின்பே அனுப்பினர். கோட்டைக்குள் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. 


காதல் ஜோடிகள் புகலிடம் கோட்டை தான். காதல் ஜோடிகள் பலரும் அங்கு வந்தனர். அவர்களை உள்ளே அனுப்பாமல் போலீசார் திருப்பி அனுப்பியனர். எங்களால் என்ன பிரச்சனை வந்துவிடப்போகிறது என புலம்பியபடியே சென்றனர் காதலர்கள். 
 

தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது நடமாட்டமிருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு எஸ்பி பிரவேஷ்குமார் கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.