Skip to main content

ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா விஷால்...? ரஜினி மன்றத்திற்கு பணத்தாசை காட்டிய ஏ.சி.எஸ்?

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

வேலூர் தொகுதி நாடாளமன்ற தேர்தலில் சின்ன சின்ன அமைப்புகளை கூட விட்டுவைக்காமல் தனக்கு ஆதரவாக செயல்படவைக்கிறார் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம். கடந்த ஜுலை 22ந்தேதி நடிகர் விஷாலின் வேலூர் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் மற்றும் மன்றத்தின் சில நிர்வாகிகளோடு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை அவரது பென்ஸ் பார்க் ஹோட்டலில் சந்தித்து தனது லட்டர் பேட் தந்து வேலூர் மாவட்ட விஷால் நற்பணி மன்றத்தின் ஆதரவு உங்களுக்கு தான் என கையெழுத்திட்ட கடிதத்தை தந்துள்ளார்.


அதிமுகவிற்கு எதிரானவராக கட்டமைக்கப்பட்டுள்ளார் நடிகர் விஷால். இந்நிலையில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு விஷால் ஆதரவு தெரிவிக்கிறாரா என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

vellore election ac shanmugam


 

இதுப்பற்றி விசாரித்தபோது, சின்ன சின்ன குழுக்கள் கூட தனக்கு ஆதரவாக செயல்பட வைக்க ஒரு குழுவை உருவாக்கியுள்ளார் ஏ.சி. சண்முகம். இவர்களின் வேலையே சமூக அமைப்புகள், சாதி சங்கங்கள், மத அமைப்புகள், சின்ன சின்ன ஏரியா குழுக்கள், சமூக வளைத்தள குழுக்கள் போன்றவற்றை ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக செயல்படவைக்கும் வேலையில் ஈடுப்பட்டுள்ளது ஏ.சி. சண்முகத்தின் குழு. நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என அவர்களின் லட்டர் பேட் டில் எழுதி கையெழுத்திட்டு தந்தால் அந்த சங்கத்தின் பலத்தை பொருத்து கணிசமான பண கவனிப்பும் உண்டு என்கிறார்கள். இப்படி தினமும் 10 குழுவாவுது வந்து ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு மகிழ்ச்சியோடு செல்கிறார்கள்.


ஏ.சி.சண்முகத்துக்கு சினிமா துறையினரோடு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் சினிமா நடிகர்களான ரஜினிகாந்த் உட்பட சிலரை சந்தித்து ஆதரவு கேட்டார். அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. இருந்தும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை இழுத்து தனது ஆதரவு என அறிக்கை விடச்சொல்ல அவர்கள் மறுக்க, அதன் நிர்வாகிகள் சிலருக்கு பணத்தாசை காட்டி தனக்காக வேலை செய்ய வைத்துள்ளதாக கூறுகிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினரே. அந்த வகையில் தான் விஷால் ரசிகர் மன்றம் தரப்பு ஆதரவு தெரிவித்துயிருக்கலாம் என கூறப்படுகிறது.


விஷால் ரசிகர் மன்ற மாவட்ட தலைமை, பணத்துக்காக இப்படி ஆதரவு தெரிவித்ததா அல்லது விஷால் சொல்லி இந்த ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததா என்பதை விஷால் சொன்னால் மட்டும் தான் தெரியும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.