Skip to main content

ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா விஷால்...? ரஜினி மன்றத்திற்கு பணத்தாசை காட்டிய ஏ.சி.எஸ்?

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

வேலூர் தொகுதி நாடாளமன்ற தேர்தலில் சின்ன சின்ன அமைப்புகளை கூட விட்டுவைக்காமல் தனக்கு ஆதரவாக செயல்படவைக்கிறார் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம். கடந்த ஜுலை 22ந்தேதி நடிகர் விஷாலின் வேலூர் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் மற்றும் மன்றத்தின் சில நிர்வாகிகளோடு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை அவரது பென்ஸ் பார்க் ஹோட்டலில் சந்தித்து தனது லட்டர் பேட் தந்து வேலூர் மாவட்ட விஷால் நற்பணி மன்றத்தின் ஆதரவு உங்களுக்கு தான் என கையெழுத்திட்ட கடிதத்தை தந்துள்ளார்.


அதிமுகவிற்கு எதிரானவராக கட்டமைக்கப்பட்டுள்ளார் நடிகர் விஷால். இந்நிலையில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு விஷால் ஆதரவு தெரிவிக்கிறாரா என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

vellore election ac shanmugam


 

இதுப்பற்றி விசாரித்தபோது, சின்ன சின்ன குழுக்கள் கூட தனக்கு ஆதரவாக செயல்பட வைக்க ஒரு குழுவை உருவாக்கியுள்ளார் ஏ.சி. சண்முகம். இவர்களின் வேலையே சமூக அமைப்புகள், சாதி சங்கங்கள், மத அமைப்புகள், சின்ன சின்ன ஏரியா குழுக்கள், சமூக வளைத்தள குழுக்கள் போன்றவற்றை ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக செயல்படவைக்கும் வேலையில் ஈடுப்பட்டுள்ளது ஏ.சி. சண்முகத்தின் குழு. நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என அவர்களின் லட்டர் பேட் டில் எழுதி கையெழுத்திட்டு தந்தால் அந்த சங்கத்தின் பலத்தை பொருத்து கணிசமான பண கவனிப்பும் உண்டு என்கிறார்கள். இப்படி தினமும் 10 குழுவாவுது வந்து ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு மகிழ்ச்சியோடு செல்கிறார்கள்.


ஏ.சி.சண்முகத்துக்கு சினிமா துறையினரோடு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் சினிமா நடிகர்களான ரஜினிகாந்த் உட்பட சிலரை சந்தித்து ஆதரவு கேட்டார். அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. இருந்தும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை இழுத்து தனது ஆதரவு என அறிக்கை விடச்சொல்ல அவர்கள் மறுக்க, அதன் நிர்வாகிகள் சிலருக்கு பணத்தாசை காட்டி தனக்காக வேலை செய்ய வைத்துள்ளதாக கூறுகிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினரே. அந்த வகையில் தான் விஷால் ரசிகர் மன்றம் தரப்பு ஆதரவு தெரிவித்துயிருக்கலாம் என கூறப்படுகிறது.


விஷால் ரசிகர் மன்ற மாவட்ட தலைமை, பணத்துக்காக இப்படி ஆதரவு தெரிவித்ததா அல்லது விஷால் சொல்லி இந்த ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததா என்பதை விஷால் சொன்னால் மட்டும் தான் தெரியும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.