Skip to main content

வேலூரில் வாக்குப்பதிவு தொடங்கியது

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

 

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாகுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.   வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  

 

v

 


வேலூர் தொகுதி வாகுப்பதிவுக்காக மொத்தம் 1553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.   வாக்குப்பதிவுக்கான  3732 மின்னணு இயந்திரங்கள்   வைக்கப்பட்டுள்ளன.  வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்ட மன்ற தொகுதியிலும் மொத்தம் 14 லட்சத்து 32ஆயிரத்து 555   மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் களத்துக்கு வந்த ஜக்கம்மா..., மக்கா ஃபோன்!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 


வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் களம் கோடைக்கால வெப்பத்தை போலவே தினம் தினம் அதிகரித்து வருகிறது. திமுக, அதிமுக இரு தரப்பினரும் தொகுதிகளில் வலம் வந்து மக்களை சந்தித்தபடியே இருக்கிறார்கள். ஆளும்கட்சியான அதிமுகவுக்கு முன்பே திமுக தேர்தல் களத்தில் வேகம் காட்டி முன்னிலை வகிக்கிறது.


ஜீலை 23ந்தேதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பணியில் சுறுசுறுப்பை காட்ட துவங்கியுள்ளனர். ஒற்றை தொகுதியில் தேர்தல் நடைபெறும் போது விதவிதமாக தங்கள் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வார்கள் தொண்டர்கள்.

 

k


அப்படியொரு வித்தியாசமான பிரச்சாரத்தை தான் திமுகவினர் கையில் எடுத்துள்ளனர். திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், தேர்தல் பிரச்சாரத்துக்காக வேலூர் தொகுதிக்கு வந்துள்ளார். அவர் தினமும் ஒரு ஊருக்கு செல்கிறார். மக்கள் கூடும் இடங்களில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து, ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா… உதயசூரியனுக்கு ஓட்டுப்போடச்சொல்றா. திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் இந்த ஊருக்காரர்ன்னு சொல்றா… திமுக வேட்பாளர் நல்லது செய்வார்ன்னு சொல்றா என குடுகுடுப்பையை அடித்தபடி ஓட்டு வேட்டையாடுகிறார். கடந்த ஜீலை 21ந்தேதி வேலூர் பேருந்து நிலையத்திலும், 23ந்தேதி ஆம்பூர் பேருந்து நிலையத்திலும் பேருந்துகளில் ஏறி வாக்குகேட்டார். இந்த வித்தியாசமான வாக்குகேட்பை பொதுமக்கள் ரசிக்க போட்டிக்கு மற்ற நிர்வாகிகளும் களத்தில் குதித்துள்ளனர்.

 

k


அதன்படி, ஆம்பூர் தொகுதியில் தங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் வடக்கு, தருமபுரி மாவட்ட கட்சியினர். அதில் ஒருசிலர் ’மக்கா போன்’ என்கிற பழைய கூம்பு வடிவு ரேடியோ போன்றதை உருவாக்கி அதன் மூலம் திமுகவுக்கு ஜீலை 23ந்தேதி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் இந்த வகையில் பிரச்சாரம் செய்தனர். மக்கா போன் மூலம் பேசும்போது அதன் சத்தம் 50 அடி தூரத்தில் இருப்பவருக்கு கேட்கும் என்பது குறிப்பிடதக்கது.


வாகனங்களில் மைக் கட்டியும், தெருமுனை கூட்டம் போட்டு வாக்குகேட்டால் தேர்தல் செலவின கணக்கில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் எழுதிவிடுவதால் இதுப்போன்ற செலவில்லாத வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்கிறார்கள்.


இதற்கு போட்டியாக வித்தியாசமாக என்ன செய்யலாம் என திமுகவின் மற்ற மாவட்டத்தினரும், தங்கள் வேட்பாளருக்கு இதைவிட வித்தியாசமாக வாக்குகேட்பது எப்படி என அதிமுக பிரமுகர்களும் யோசித்து வருகின்றனர் என்பது தான் குறிப்பிடத்தக்கது.

Next Story

தலைக்கு ஆயிரம் - வேலூர் தொகுதியில் பட்டுவாடாவை தொடங்கிய ஏ.சி.சண்முகம்

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

 


வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பந்தாவாக தொடங்கி, இடையில் பரபரப்பை உருவாக்கி, தற்போது ஆச்சர்யத்தோடு போய்க்கொண்டுயிருக்கிறது.

 

a


 

பந்தா….


அதிமுகவின் சின்னத்தில் பாஜகவின் நண்பரான ஏ.சி.சண்முகம் இந்த தொகுதியில் நிற்கிறார். இவரை எதிர்த்து திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் நிற்கிறார். இருவரும் பந்தாவாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். சொந்த கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் தேர்தல் செலவுக்காக வாரி தந்தார்கள்.  அவர்களும் பரபரப்பாக தேர்தல் வேலை பார்க்க தொடங்கினார்கள். அதோடு, அதிக வாக்குகள் வாங்கி தரும் தொகுதி நிர்வாகிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, 50 லட்சம் பரிசு என போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தார்கள்.


பரபரப்பு…


பிரச்சாரம் நடந்துக்கொண்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு செய்து 10 லட்சம் பறிமுதல் செய்தது. ஆதரவாளர் வீட்டில் 11 கோடி ரூபாய் பணத்தினை பிடித்தது. அதேப்போல் ஏ.சி.சண்முகத்துக்கு நெருக்கமான நண்பரின் கல்லூரியில் ரெய்டு செய்து பணத்தை பிடிக்க மேலிடத்து உத்தரவால் விவகாரத்தை அமுக்கிவிட்டு சென்றனர் என்கிற தகவலும் உண்டு. இந்த பிரச்சனைகளால் தேர்தல் நிறுத்தப்படும் என்கிற பதட்டம் தற்போது வரை உள்ளது.


ஆச்சர்யம்……


இந்நிலையில் ஏப்ரல் 13ந்தேதி இரவு வாணியம்பாடி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டு ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என பண விநியோகம் செய்துள்ளனர். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் அந்த தொகுதியில் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் தந்துள்ளனர். அதேப்போல் குடியாத்தம், அணைக்கட்டு தொகுதியிலும் கச்சிதமாக வாக்காளர்களுக்கு தர வேண்டியதை தந்துள்ளனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


பணம் தரும் தகவல் பறக்கும் படையினருக்கு தெரிந்தும் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தள்ளது. ஆரம்பம் முதலே திமுக வேட்பாளரை மட்டும் குறிவைத்த பறக்கும்படை மற்றும் வருமானவரித்துறை அவர்களை விட பலமடங்கு செலவழிக்கும் ஏ.சி.சண்முகத்தை கண்டுக்கொள்ளவேயில்லை என்கிற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது அரசியல் பார்வையாளர்களால்.