Skip to main content

நடுரோட்டில் அடித்துக்கொண்ட திமுக முக்கிய பிரமுகர்கள்!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

வேலூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம் ஒன்றியத்தின் வடக்கு ஒன்றிய பகுதியின் செயலாளராக இருப்பவர் கல்லூர் ரவி. இவர் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவர். நீண்ட வருடங்களாக குடியாத்தம் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். திமுகவின் குடியாத்தம் வடக்கு ஒன்றியத்தின் துணை செயலாளராக இருப்பவர் சத்தியானந்தம். இவர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏவின் நெருங்கிய குடும்ப உறவினர். 2016 சட்டமன்ற தேர்தலின் போது கே.வி.குப்பம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியை சந்தித்தார் கல்லூர்.ரவியின் தம்பி மனைவி அமுலு. தேர்தல் நேரத்தில் தேர்தல் செலவுக்கான தொகையை ரவி, சத்தியானந்தத்திடம் கொடுத்து வைத்திருந்தார். சத்தியானந்தத்தின் பண்ணை வீட்டில் வைத்து தான் பணம் தொகுதி முழுவதும் செலவிடப்பட்டுள்ளது.

 

 

 

VELLORE DMK PARTIES LEADER FIGHT

 

 


சமீபத்தில் ஒன்றிய செயலாளர் ரவி, சிலரிடம், தேர்தலின் போது நான் தந்து வைத்திருந்த பணத்தை சத்தியானந்தன் சுருட்டியுள்ளார் என கூறியதாக கூறப்படுகிறது. அந்த தகவல் சத்தியானந்தம் கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதைக் கேள்விப்பட்டு கோபமான சத்தியானந்தம் ஜூலை 9 ஆம் தேதி இரவு 9 மணியளவில் குடியாத்தம் சித்தூர் பஸ்கேட் அருகில் ரவியிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டுள்ளனர். ஒருக்கட்டத்தில் வார்த்தை தடித்து இருவரும் சாலையிலேயே அடித்துக்கொண்டுள்ளனர். திமுகவின் மிக முக்கிய பிரமுகர்கள் இருவரும் நடுரோட்டில் அடித்துக்கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அடித்துக் கொண்ட இருவரையும் அவர்களுடன் இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர். இருவரும் கோபத்துடன் கிளம்பி சென்றுள்ளனர். கல்லூர்.ரவி இதுப்பற்றி சத்தியானந்தம், துரைமுருகனிடமும்,  நந்தகுமாரிடமும் தெரிவித்துள்ளார்கள். தேர்தல் நேரம் என்பதால் விவகாரத்தை பெருசுப்படுத்தாதிங்க, தேர்தல் முடிஞ்சதும் பார்த்துக்கலாம் என சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.