Skip to main content

தொடரும் குடிதண்ணீர் பிரச்சனை! கண்ணீர் விடும் மக்கள்

Published on 28/04/2019 | Edited on 28/04/2019

 

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு அந்த வழியாக செல்லும் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்துவருகின்றனர். அதோடு, ஊரிலும் சில ஆழ்துளை கிணறுகளை அமைத்து அங்கிருந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் அனுப்பி பொதுமக்களுக்கு சப்ளை செய்கின்றனர்.

 

r

 

கடந்த 6 மாதத்துக்கு முன்பு சரியாக குடிநீர் சப்ளை செய்யாமல் வாரம் ஒருமுறை மட்டும் குழாயில் தண்ணீரை விட்டுள்ளனர். கடந்த 3 மாத காலமாக முற்றிலும் குடிநீர் வழங்குவதை நிறுத்தியுள்ளனர். குடிநீர் வழங்கப்படாததை வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் கூறியுள்ளனர், அதிகாரிகள் அதை கண்டுக்கொள்ள வில்லையாம்.

 

இதனால் அப்பகுதி மக்கள் குடிக்க தண்ணீரில்லாமல் கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். தொடர்ச்சியாக கேன் தண்ணீரை வாங்க முடியாத அளவுக்கு ஏழை மக்களின் பொருளாதார நிலையிருப்பதால், குடிதண்ணீர் தொடர்ச்சியாக கிடைக்க மாற்று வழியை ஏற்படுத்தி தர வேண்டுமென அக்கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிகுடங்கலுடன் வந்து ராணிப்பேட்டை டூ சோளிங்கர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

 

r

 

இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. அதன்பின் வந்த அதிகாரிகள் பெண்களிடம் சமாதானம் பேசி, குடிதண்ணீர் விரைவில் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்கிறோம் என வாக்குறுதி தந்துவிட்டு சென்றனர்.

 

கடந்த 2 மாதங்களாகவே வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, கே.வி.குப்பம், திருப்பத்தூர் பகுதிகளில் மக்கள், குடி தண்ணீருக்காக சாலைமறியல், போராட்டம் என நடத்திவருகின்றனர்.

 

குடி தண்ணீரில்லாமல் கிலோ மீட்டர் கணக்கில் சென்று கொண்டு வருவது பெண்களை கண்ணீர் விடவைத்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

என் எல்லைக்குள் வராதே!!! தடை போட்ட ராணிப்பேட்டை மாவட்டம்...

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
 Don't fall within my range ... Ranipettai district


தமிழகத்தில் வேகமாக கரோனா பரவி வருகிறது. இருந்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசும் அதனை கட்டுப்படுத்துவதில் சுணக்கமாகவே உள்ளன. அதோடு, அனைத்துவிதமாக தொழிற்சாலைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளன.


அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து விதமான தொழிற்சாலைகளும் 100 சதவிதம் இயங்க தொடங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளுவர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்கு செல்கின்றனர். இவர்களை அழைத்து செல்ல அந்த நிறுவனங்கள் பேருந்துகளை இயக்குகிறது.

வாகன போக்குவரத்தை பொருத்தவரை வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஒரு மண்டலம். அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்றவை ஒரு மண்டலம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஒரு மண்டலம், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி மட்டும் ஒரு மண்டலம் என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டலங்களுக்குள் பேருந்துகள் உட்பட வாகனங்களை இயக்கிக்கொள்ளலாம். மற்றப்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வாகனங்களை இயக்கக்கூடாது என அரசு விதிமுறை வகுத்துள்ளது.

அதேபோல் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல வாகனங்களுக்கு எந்த தடையுமில்லை என அறிவித்தும் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சொந்த ஊரை நோக்கி பயணமாகின்றன. அப்படி வருபவர்களால் அந்தந்த மாவட்டங்களில் நோய் தொற்று உருவாகி எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் தடுமாறத்துவங்கியுள்ளன. அதனை கவனத்தில் கொண்டு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வருபவர்களை தடுக்க துவங்கியுள்ளன மாவட்ட நிர்வாகங்கள்.

 

 

 Don't fall within my range ... Ranipettai district


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கிறது மாவட்ட காவல்துறை. இதற்காக மாவட்ட எல்லையிலேயே செக்போஸ்ட் அமைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து யாராவது வந்தால் அவர்களை திருப்பி அனுப்புகிறது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களைகூட அனுமதிப்பதில்லை. அதேநேரத்தில் இ-பாஸ் வாங்கிக்கொண்டு வருபவர்களை எல்லையில் புதியதாக ஏற்பாடு செய்துள்ள தற்காலிக கரோனா இல்லத்தில் தங்கவைத்து அவர்களுக்கு பரிசோதனை செய்து, நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டுள்ளார் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி.


காஞ்சிபுரம் மாவட்ட திருபெரும்புதூர் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரபல தனியார் நிறுவனம், நிறுவன பேருந்துகள் மூலம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜூன் 13ந் தேதி சென்றன. அந்த வாகனங்களை காஞ்சிபுரம் – இராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டரையில் காவல்துறை நிறுத்திவிட்டன.

இதுவேறு மண்டலம், காஞ்சிபுரம் வேறு மண்டலம் வாகன போக்குவரத்துக்கு அனுமதியில்லை எனச்சொல்லி நிறுத்திவிட்டது காவல்துறை. இதனால் தொழிற்சாலை நிர்வாகம் அதிர்ச்சியடைந்துவிட்டது. பின்னர் அதிகார மட்டத்தில் பேசி, தொழிலாளர்களை இறக்கிவிட்டுவிட்டு வாகனங்கள் இருப்பிடத்துக்கு செல்ல அனுமதி வழங்க அதன்படி வாகனங்கள் சென்றதாக கூறப்படுகிறது.

 

 

Next Story

3 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்... 5 பேர் கைது

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வனச்சரக அலுவலர் கந்தசாமிக்கு வந்த தொலைபேசி தகவலில் சோளிங்கர் அடுத்த பானாவரம் காப்புக்காடு பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

 

3 tons of red wood seized ... 5 arrested

 

அதன் அடிப்படையில் வனத்துறையினர் நடத்திய தேடல் வேட்டையில் காப்புக்காட்டில் ஒருபகுதியில் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.

அதனை கைப்பற்றி தங்களது அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அதன் மொத்த எடை 3 டன் எனக்கூறுகின்றனர். இந்த செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.