Skip to main content

ஏரிக்கு வராத நீர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்... களத்தில் குதித்த திமுக எம்.எல்.ஏ..!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

vellore district rain water dame issue DMK MLA


'நிவர்' புயல் காரணமாக, வேலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் தாலுக்காவில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயப் பயிர்கள் அழிந்து, விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

 

அதேநேரத்தில் பாலாறு உட்பட சிறு நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆந்திராவில் மழை பெய்வதால் பாலாற்றில் அதிகளவு நீர் வருகிறது. விவசாயத்துக்குப் பயன்படும் அளவில் ஆற்று நீரை தேக்குவதற்குத் தேவையான அணைக்கட்டுகள் இல்லாத நிலை மற்றும் பாலாறு உட்பட கிளை நதிகளில் இருந்து ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்களைச் சீர் செய்யாதது, குடிமராமத்துப் பணிகள் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் ஏரிகளுக்குத் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


மோர்தானா அணையில் இருந்து நீர் வெளியேறி ஏரிகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அதிகாரிகள் கால்வாய்களைச் சீர் செய்யாததால் அணைக்கட்டுத் தொகுதியில் உள்ள சதுப்பேரி, பொய்கை, செதுவாலை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் செல்லவில்லை.


இதுபற்றி அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவும், வேலூர் மாவட்ட தி.மு.க மா.செவுமான நந்தகுமார் கவனத்துக்குச் சென்றது. தற்காலிகமாக தனது சொந்தச் செலவில் அந்தக் கால்வாய்களைத் தூர்வார இயந்திரங்களை வரவழைத்துப் பணிகளைச் செய்துள்ளார் நந்தகுமார். கால்வாய் சீரமைக்கும் பணிகளை உடனடியாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்க வேண்டுமென அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அதிகாரிகள் பணிகளைச் செய்யவில்லை.

 

இதனால், அதிகாரிகளைக் கண்டித்து, நவம்பர் 30 -ஆம் தேதி குடியாத்தம் – பள்ளிக்கொண்டா சாலையில், தி.மு.க.வினர் 200 பேரோடு மறியலில் ஈடுபட்டார் எம்.எல்.ஏ நந்தகுமார். அங்கு வேலூர், பள்ளிக்கொண்டா காவல்நிலைய காவலர்கள் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர், எம்.எல்.ஏவிடம் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கேட்டு எம்.எல்.ஏவுடன் இருந்த தி.மு.க நிர்வாகிகள் கொதிப்படைந்து, மரியாதை கொடுத்து பேசுங்க எனச் சொல்ல, காவல்துறை அதிகாரிகளுக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதமனாது. பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து விரைவில் சரி செய்கிறோம் என்றனர். அதன்பின்னர் சாலைமறியலை கைவிட்டனர்.


இதுபற்றி நந்தகுமார் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசும்போது, 29 ஆண்டுகளுக்குப் பின்பு மோர்தானா அணை நிரம்பி 10,500 கன அடி நீர் வெளியேறியது. அந்த நீர், கடலில் சென்று கலந்தது. மோர்தானா அணையின் கால்வாய் சீரமைத்திருந்தால், என் தொகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியிருக்கும். ஆனால், அதிகாரிகள் அதனைச் செய்யவில்லை. மழைக்காலத்துக்கு முன்பே நாங்கள் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் எனப் போராட்டம் செய்தோம். அதிகாரிகள் பணமில்லை எனச் சொல்லி செய்யவில்லை. பொதுப் பணித்துறையின் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு தந்தோம். இந்த அ.தி.மு.க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் நீர் வந்திருக்கும், தி.மு.க.வினரான நாங்கள் இப்போது போராட வேண்டியிருக்காது. நான் சொந்தச் செலவில் கால்வாயை சீரமைத்துக்கொண்டு இருக்கிறேன். அதனைச் செய்யக்கூடாது என அதிகாரிகள் தடுக்கிறார்கள். தி.மு.க.வுக்கு பெயர் வந்துவிடும் என அதிகாரிகள் தடுப்பது நியாயமா எனக் கேள்வி எழுப்பினார்.  

 

cnc

 

கால்வாயைச் சீரமைக்கிறோம் எனச் சாலை மறியலின்போது அதிகாரிகள் கூறினார்களே தவிர, இப்போதுவரை சீரமைக்கும் பணியைச் செய்யவில்லை. இதனால் எம்.எல்.ஏ நந்தகுமார், தனது சொந்த நிதியில் இருந்து தொடர்ந்து கால்வாய் சீரமைக்கும் பணியினை செய்துவருகிறார்.

 

வேலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள சண்முகசுந்தரத்துக்கும் – அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமாருக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம், எம்.எல்.ஏ என்கிற முறையில், மக்கள் தந்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொண்டுசென்று தர முயன்றபோது, வாங்காமல் போக்குக் காட்டியவர் கலெக்டர். அதோடு, அதிகாரிகள் சரியாகச் செயல்படாதது குறித்து மேடையிலேயே அமைச்சர் வீரமணி முன்னிலையிலேயே கூறியது, அமைச்சரின் அத்துமீறிய பேச்சை, மேடையிலேயே கண்டித்தது போன்றவற்றால் கலெக்டர் அதிருப்தியாகி, எம்.எல்.ஏ நந்தகுமார் எதாவது செய்யுங்கள் என்றால் செய்யாதீர்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.