மறியல் போராட்டம் செய்த விவசாயிகள் கைது!

விவசாயிகளின் நிலங்களில் மின்கோபுரம் அமைக்க, கட்டாய நில எடுப்பு சட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளின் நில உரிமையை பறிப்பதோடு, அவர்களுக்கு குறைந்த நஷ்டயீட்டு தொகையை வழங்கும் அரசின் செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக விவசாய சங்கம், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் நவம்பர் 18ந்தேதி மறியல் போராட்டம் நடைபெற்றது

vellore district farmers strike tamilnadu government

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 50- க்கும் அதிகமான விவசாயிகள் வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதும், ஆற்காடு நகர போலீஸார் அவர்களை மடக்கி நிறுத்தி கைது செய்தனர்.

Farmer POLICE ARRESTED strike
இதையும் படியுங்கள்
Subscribe