Skip to main content

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை...விவகாரத்தை மறைத்த போலீஸ்!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியுடவுன் பகுதியில் வசிப்பவர் வாணியம்பாடியில் உள்ள பிரபல  ஜவுளிக்கடை அதிபர் வடிவேல். இவரது வீட்டின் பூட்டை ஜூலை 7 ஆம் தேதி இரவு உடைத்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த 92 சவரன் தங்க நகை 25 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஜூலை 8 ஆம் தேதி காலை இதைப் பார்த்து விட்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு தகவல் கூறியுள்ளனர். இது போன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்றால் பத்திரிக்கைகளுக்கு தகவல் தருவது வழக்கம். இந்த விவகாரத்தில் பத்திரிக்கை, மீடியாவுக்கு தகவல் சொல்லவில்லை.

 

 

 VELLORE Businessman's house robbed ... THIS ISSUE HIDDEN POLICE

 


இந்நிலையில் ஜூலை 8 ஆம் தேதி மாலை கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார் வருகை தந்தார். அப்போது தான் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த விவகாரம் தெரிந்து அதிர்ச்சியாகி விட்டனர். கொள்ளை நடந்த வீடு, வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலத்தை சேர்ந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் சிலரின் நடமாட்டம் இருந்துள்ளது. இதுப்பற்றி போலீசாருக்கு தகவல் சொல்லியும் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் இருந்தும் காவல்துறையினரின் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

 

 

 VELLORE Businessman's house robbed ... THIS ISSUE HIDDEN POLICE

 

 


வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது பற்றி காவல்துறையில் புகார் தந்தால் புகாரை வாங்க மறுப்பதும் 100 சவரன் தங்க நகை காணவில்லை என்று புகார் கொடுத்தால் 20 பவுன் என எழுதி தந்தால் தான் வாங்குவோம் என மிரட்டி அவர்கள் சொல்வது போல் புகாரை எழுதி வாங்கி பதிவு செய்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு திருடு நடந்தால் அதுப்பற்றி பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளனர். இந்த தொழிலதிபரையும் அப்படி தான் வாணியம்பாடி காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பி மிரட்டினார்கள் எனக் கூறப்படுகிறது. திருடர்களுடன் காவல்துறையை சேர்ந்தவர்கள் கூட்டு வைத்திருப்பது மற்றும் மெத்தனமாக செயல்படுவது போன்றவற்றால் தான் திருடுகள் அதிகமாக நடைபெறுகின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.