Skip to main content

"கண்காணிப்பு கேமராக்கள் தமிழகத்திலேயே இங்குதான் அதிகம்" - கேமராக்களை இயக்கிவைத்து திருவண்ணாமலை டிஐஐீ பேச்சு...

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

vellore dig speech in cctv inauguration function

 

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்களம் பேரூராட்சியின் பல இடங்களில் காவல்துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில், காவல்துறை ஆய்வாளர் விநாயகமூர்த்தி அமைத்தார். ஜனவரி 15 ஆம் தேதி அந்த கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைக்கும் நிகழ்வுக்கு வேலூர் மண்டல காவல்துறை துணைத் தலைவர் காமினி வருகை தந்தார்.

 

கேமராக்களின் செயல்பாடுகளை கண்ணமங்களம் காவல்நிலையத்தின் கண்காணிப்பு அறையில் இருந்து இயக்கிவைத்து அதனைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காவல்நிலைய பகுதியில் தான் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது என்றார்.

 

நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் வசிக்கும் வீடற்ற, ஏழை மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உதவி பொருட்கள் டிஐஐீ காமினி, எஸ்.பி அரவிந்த், ஏ.டி.எஸ்.பி அசோக்குமார் வழங்கினார்கள்.

 

கண்ணமங்களம் என்பது சிறிய பேரூராட்சி பகுதி. வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையோர பகுதியாகும். கண்ணமங்களம் பகுதியோடு திருவண்ணாமலை மாவட்டம் எல்லை முடிகிறது. 24 மணி நேரமும் பிஸியாக போக்குவரத்து உள்ள பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கு அடிக்கடி குற்றச் சம்பங்கள் நடைபெறுகின்றன. அதனாலேயே இங்கு கூடுதலான அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்கிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.