Skip to main content

வேலூர் மக்களவை தேர்தல்- வாக்குப்பதிவின் முழு விபரங்கள்!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குபதிவு ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,01,351 பேரும், பெண் வாக்காளர்கள் 7,31,099 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 105 பேரும் உள்ளனர்.


வேலூர் தொகுதியில் பதிவான 71.52 சதவீதம் ஆகும். அதாவது 10,24,352 மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். மொத்தமாக பதிவான வாக்குகளில் ஆண் வாக்காளர்கள் 5,02,861 பேரும், பெண் வாக்காளர்கள் 5,21,452 பேரும் வாக்களித்துள்ளனர். 

 

vellore constituency lok sabha election polling details

 


வேலூர் மக்களவை தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகமான வாக்குகள் பதிவான தொகுதி கே.வி.குப்பம் ( தனி ) ஆகும். இந்த தொகுதியில் 2,14,826 வாக்குகள் உள்ளன. அதில், 1,62,413 வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு 52,000 வாக்குகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.


அதேபோல் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் வாணியம்பாடி தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,36,911 ஆகும். இதில் பதிவானது 1,73,545 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த தொகுதியில் 63,000- க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை. மேலும் ஆம்பூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,24,863 ஆகும்.  இதில் பதிவானது 1,58,591 வாக்குகளாகும். இங்கு 66 ஆயிரம் வாக்குகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

vellore constituency lok sabha election polling details

 


ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி குடியாத்தம் ( தனி ) ஆகும். இந்த தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை, 2,71,855 ஆக உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 1,87,743 ஆகும். இந்த தொகுதியில் சுமார் 80,000 மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை.


திமுக, அதிமுக பெரிதும் கவனம் செலுத்திய தொகுதி அணைக்கட்டு. இந்த தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை, 2,39,045 ஆக உள்ளது. இதில் பதிவானது 1,78,723 வாக்குகள் மட்டுமே. சுமார் 60,000- க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை.


இதில், வேலூர் சட்டமன்ற தொகுதியில் தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. 66.65 சதவித அளவுக்கு தான் வாக்குகள் பதிவாகியுள்ளது. அந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,45,055 ஆகும். இதில் பதிவான 1,63,337 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. சுமார், 81,000 மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை. இந்த வேலூர் தொகுதி வேலூர் மாநகராட்சியை உள்ளடக்கியது. படித்தவர்கள் அதிகமுள்ள, இந்த தொகுதியில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.